தமிழ்ப் பழமொழிகள்
193
உறை மோருக்கு இடம் இல்லாத வீட்டில் விலை மோருக்குப் போனது போல. 4490
உன் அப்பன்மேல் ஆணை; என்மேலே ஆசையாய் இருக்க வேண்டும்.
உன் இழவு எடுக்க.
உன் உத்தமித் தங்கை ஊர் மேயப் போனதால் என் பத்தினிப் பானை படபட என்கிறது.
உன் உபசாரம் என் பிராணனுக்கு வந்தது.
உன் உயிரினும் என் உயிர் கருப்பட்டியா? 4495
உன் எண்ணத்தில் இடி விழ.
உன் எண்ணத்தில் எமன் புகுத.
உன் காரியம் முப்பத்திரண்டிலே .
உன் காலை நீயே கும்பிட்டுக் கொள்ளாதே.
உன் குதிரை குருடு; ஆனாலும் கொள்ளுத் தின்பது கொள்ளை. 4500
உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்.
- (திருவாசகம்.)
உன் கொண்டை குலைய.
உன் சமர்த்திலே குண்டு பாயாது.
உன் சொல்லிலே உப்பும் இல்லை; புளியும் இல்லை.
உன் தலையில் எழுதி மயிரால் மறைத்து விட்டான் ஆண்டவன். 4505
உன் தாலி அறுக்கச்சே ஒரு கட்டுத் தாலி ஒருமிக்க அறுக்க வைக்கிறேன்.
உன் தாலி அறுந்து தண்ணீர்ப் பானையில் விழ.
உன் தொடையைப் பாம்பு பிடுங்க.
- (தொண்டையை.)
உன் நெஞ்சில் தட்டிப் பார்.
- (தொட்டுப்பார்.)
உன் பாடு கொள்ளைதானே? 4510
உன் பாடு யோகம்.