பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தமிழ்ப் பழமொழிகள்


ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு எளிது.

(கொண்டாட்டம், அழகு.)

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத் தொக்கு.

(கொள்ளை.)

ஊர் இருக்கிறது; ஓடு இருக்கிறது.

ஊர் இருக்கிறது பிச்சை போட; ஓடு இருக்கிறது வாங்கிக் கொள்ள.

ஊர் இருக்கிறது; வாய் இருக்கிறது. 4655

ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்; வீட்டு இளக்காரம் மாப்பிள்ளைக்குத் தெரியும்,

ஊர் உண்டாகி அல்லவோ, கிழக்கு மேற்கு உண்டாக வேண்டும்?

ஊர் உண்டு பிச்சைக்கு; குளம் உண்டு தண்ணீருக்கு.

ஊர் ஊராய்ப் போவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை.

ஊர் எங்கும் சம்பை; என் பேரோ வம்பை. 4660

ஊர் எங்கும் சுற்றி உனக்கு ஏதடா புத்தி?

ஊர் எங்கும் பேறு; வீடு பட்டினி.

(பேர்.)

ஊர் எச்சம்; வீடு பட்டினி.

(யாழ்ப்பாண வழக்கு.)

ஊர் எல்லாம் உற்றார்; அந்தி பட்டால் பொதுச் சந்தியிலே.

ஊர் எல்லாம் உறவு; ஒரு வாய்ச் சோறு இல்லை. 4665

ஊர் எல்லாம் கடன்; உடம்பெல்லாம் பொத்தல்.

ஊர் எல்லாம் கல்யாணம்; மார் எல்லாம் சந்தனம்.

ஊர் எல்லாம் சதமாகுமோ? ஒரு மரம் தோப்பாகுமோ?

ஊர் எல்லாம் சுற்றி எனக்கென்ன புத்தி?

(என் பேர் முத்தி.)

ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் புரண்டு அழுதால் வருமா? 4670

ஊர் என்று இருந்தால் பறைச் சேரியும் இருக்கும்.

ஊர் எனப்படுவது உறையூர்.

(இறையனார் அகப்பொருள் உரை.)