200
தமிழ்ப் பழமொழிகள்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு எளிது.
- (கொண்டாட்டம், அழகு.)
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத் தொக்கு.
- (கொள்ளை.)
ஊர் இருக்கிறது; ஓடு இருக்கிறது.
ஊர் இருக்கிறது பிச்சை போட; ஓடு இருக்கிறது வாங்கிக் கொள்ள.
ஊர் இருக்கிறது; வாய் இருக்கிறது. 4655
ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்; வீட்டு இளக்காரம் மாப்பிள்ளைக்குத் தெரியும்,
ஊர் உண்டாகி அல்லவோ, கிழக்கு மேற்கு உண்டாக வேண்டும்?
ஊர் உண்டு பிச்சைக்கு; குளம் உண்டு தண்ணீருக்கு.
ஊர் ஊராய்ப் போவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை.
ஊர் எங்கும் சம்பை; என் பேரோ வம்பை. 4660
ஊர் எங்கும் சுற்றி உனக்கு ஏதடா புத்தி?
ஊர் எங்கும் பேறு; வீடு பட்டினி.
- (பேர்.)
ஊர் எச்சம்; வீடு பட்டினி.
- (யாழ்ப்பாண வழக்கு.)
ஊர் எல்லாம் உற்றார்; அந்தி பட்டால் பொதுச் சந்தியிலே.
ஊர் எல்லாம் உறவு; ஒரு வாய்ச் சோறு இல்லை. 4665
ஊர் எல்லாம் கடன்; உடம்பெல்லாம் பொத்தல்.
ஊர் எல்லாம் கல்யாணம்; மார் எல்லாம் சந்தனம்.
ஊர் எல்லாம் சதமாகுமோ? ஒரு மரம் தோப்பாகுமோ?
ஊர் எல்லாம் சுற்றி எனக்கென்ன புத்தி?
- (என் பேர் முத்தி.)
ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் புரண்டு அழுதால் வருமா? 4670
ஊர் என்று இருந்தால் பறைச் சேரியும் இருக்கும்.
ஊர் எனப்படுவது உறையூர்.
- (இறையனார் அகப்பொருள் உரை.)