பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தமிழ்ப் பழமொழிகள்


ஊரில் பெண் திரண்டால் எனக்கு என்ன ஆச்சு: உனக்கு என்ன ஆச்சு.

(புரோகிதர் கூற்று.)

ஊரிலே அழகியைப் பிடிக்கப் போகிறானென்று ஆந்தையும் குரங்குமாய் ஓடிப் போச்சாம்.

ஊரிலே ஒரு குடியும் அல்ல; ஏரியிலே ஒரு பயிரும் அல்ல. 4750

ஊரிலே கல்யாணம்; மாரிலே சந்தனம்.

ஊரிலேயும் போவான்; சொன்னால் அழுவான்.

ஊருக்கு அரசன் ஆனாலும் தாய்க்குப் பிள்ளைதான்.

ஊருக்கு அரசன் காவல்; வீட்டுக்கு நாய் காவல்.

ஊருக்கு ஆகாதது உடம்புக்கும் ஆகாது. 4755

ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கு ஆவானா?

(ஆகான்.)

ஊருக்கு இட்டு ஊதாரி ஆனான்.

ஊருக்கு இரண்டு பைத்தியக்காரன்.

ஊருக்கு இரும்பு அடிக்கிறான்; வீட்டுக்குத் தவிடு இடிக்க முடியவில்லை.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் மச்சினன் பெண்டாட்டி. 4760

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியார்.

ஊருக்கு உழைக்கிற கிராமணி.

ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உச்சிப் பிள்ளையாருக்கு ஒரு வழி.

ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உனக்கு ஒரு வழியா?

ஊருக்கு எல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி, கூழ்ப் பானையில் விழுந்தது போல. 4765

(காடிப் பானையில், கழுநீர்ப் பானையில்,)

ஊருக்கு ஏற்ற மாடு வாங்கினவனும் இல்லை; தாய்க்கு ஏற்ற பெண் கட்டினவனும் இல்லை.

ஊருக்கு ஏற்றுக் கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான்.

ஊருக்கு ஒடுங்கான், யாருக்கும் அடங்கான்.

ஊருக்கு ஒரு தேவடியாள் ஆருக்கென்று ஆடுவாள்?

(தாசி.)