பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208


எக்கியத்தில் மூத்திரம் பெய்தது போல.

எக்குப் புடைவை சோர்ந்தால் கைக்கு உண்டோ உபகாரம்?

(உபசாரம், எக்கு-இடுப்பு.)

எக்கேடு கெட்டுப் போ; எருக்கு முளைத்துப் போ. 4840

எகனை முகனை பார்க்கிறான்.

எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்.

(போய் வந்தார்.)

எங்கள் அகத்துக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உங்கள் அகத்துக்கு வந்தால் என்ன தருகிறாய்?

(வீட்டுக்கு.)

எங்கள் அகத்துப் பெண் பொல்லாதது; உங்கள் அகத்துப் பிள்ளையை அடக்குங்கள்.

எங்கள் அப்பன் பிறந்தது வெள்ளி மலை; ஆய் பிறந்தது பொன் மலை. 4845

எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை.

எங்கள் வீட்டில் விருந்து வைக்கிறேன் வாருங்கள்; இலை வாங்க மறந்துவிட்டேன் போங்கள்.

எங்கள் வீட்டு அகமுடையானுக்கும் அரண்மனையில் சேவகம்.

எங்களால் ஒன்றும் இல்லை; எல்லாம் உங்கள் தர்மம்.

எங்கு இருந்தாலும் ஆனை பெருமாளதுதானே? 4850

(பெருமாள்தானே.)

எங்கும் சுற்றி ரங்கநாதா என்றான்.

எங்கு ஏறிப் பாய்ந்தாலும் கொங்கு ஏறிப் பாயேன்.

(காவிரிபின் கூற்று, ஏறிப் பாயாது.)

எங்கும் சிதம்பரம் பொங்கி வழிகிறது.

எங்கும் சிரித்து எள்ளுக் கொல்லை காக்கிறவன்.

எங்கும் சுற்றி ரங்கனைச் சேவி. 4855

(பார்.)