தமிழ்ப் பழமொழிகள்
209
எங்கும் செத்தும் நாக்குச் சாகவில்லை.
எங்கும் பருத்தி எழுபது பலம்.
எங்கும் பொன்னம்பலந்தான்.
எங்கும் மடமாய் இருக்கிறது; இருக்கத்தான் இடம் இல்லை.
எங்கே அடித்தாலும், நாய்க்குக் காலிலே முடம். 4860
எங்கே அடித்தாலும் நாய் காலைத் தூக்கும்.
எங்கே சுற்றியும் ரங்கனைத்தான் சேவிக்க வேணும்.
எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க இடம் ஒன்று வேண்டும்.
எங்கே புகை உண்டோ, அங்கே நெருப்பு உண்டு.
எங்கேயோ இடித்தது வானம் என்று இருந்தேன்; தப்பாது என் தலையிலேயே இடித்தது. 4865
எங்கேயோ எண்ணெய் மழை பெய்ததென்று இருந்தாளாம்.
எங்கே வந்தது இரை நாய்? பங்குக்கு வந்தது மர நாய்.
எங்கே வெட்டினாலும் எப்படிச் சாயும் என்று பார்க்க வேணும்.
எச்சரசம் ஆனாலும் கைச்சரசம் ஆகாது.
எச்சில் அறியாள், துப்பல் அறியாள்; என் பெண் பதின்கலக் காரியம் செய்வாள். 4870
எச்சில் இரந்து அடிக்கும்; பற்றுப் பறக்க அடிக்கும்.
எச்சில் இரக்கும்; தூமை துடைக்கும்.
- (தீட்டுத் துடைக்கும்.)
எச்சில் இலை எடுக்க வந்ததா நாய்? எண்ணிப் பார்க்க வந்ததா நாய்?
எச்சில் இலைக்கு அலையும் நாய் போல.
எச்சில் இலைக்கு இச்சகம் பேசுகிறது. 4875
- (எச்சில் தீட்டுக்கு.)
எச்சில் இலைக்கு இதம் பாடுகிறது.
எச்சில் இலைக்கு எதிர் இலை போடலாமா?
எச்சில் இலைக்கு ஏஜெண்டு; குப்பைத் தொட்டிக்குக் குமாஸ்தா.
எச்சில் இலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறது போல.
எச்சில் இலைக்குப் போட்டி போடும் நாய் மாதிரி. 4880
எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு; மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவு.
எச்சில் இலை கண்ட நாய் போல.