தமிழ்ப் பழமொழிகள்
215
எண்ணத்தில் மண் விழுந்தது.
எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது.
- (ஏடு இடம் கொள்ளாது.)
எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக் கொள்ள, தட்டுவாணிக் குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்.
- (மண்ணைத்தின்ன, நொண்டிக்குதீரை வந்து.)
எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணை மண்ணைத் தின்னு கையில் குருட்டுக் கழுதை கோதுமை ரொட்டிக்கு அழுகிற தாம்.
எண்ணம் அற்ற ராஜா பன்றிவேட்டை ஆடினாற்போல். 5005
- (என்னச் சுற்ற.)
எண்ணம் இட்டவன் தூங்கான்; ஏடு எடுத்தவனும் தூங்கான்.
எண்ணம் எல்லாம் பொய்; எமன் ஓலை மெய்.
எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய்.
எண்ணம் எல்லாம் பொய்; ஏளிதம் மெய்.
- (ஏளனம்.)
எண்ணம் எல்லாம் பொய்; மெளனமே மெய். 5010
எண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
எண்ணிச் சுட்டது தேசை.
எண்ணிச் செய்கிறவன் செட்டி; எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
எண்ணிச் சுட்ட பணியாரம், பேணித் தின்னு மருமகனே மருமகனே.
- (மாப்பிள்ளை.)
எண்ணிச் செட்டுப் பண்ணு; எண்ணாமல் சாகுபடி பண்ணு. 5015
எண்ணிச் செய்வது செட்டு; எண்ணாமல் செய்வது வேளாண்மை.
எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு.
- (குறள்.)
எண்ணிப் பார் குடித்தனத்தை; எண்ணாதே பார் வேளாண்மையை.
எண்ண முடியாது; ஏட்டில் அடங்காது.
எண்ணிய எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய். 5020
எண்ணிய எண்ணம் என்னடி? அண்ணா என்று அழைத்த முறை என்னடி?