பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

215


எண்ணத்தில் மண் விழுந்தது.

எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது.

(ஏடு இடம் கொள்ளாது.)

எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக் கொள்ள, தட்டுவாணிக் குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்.

(மண்ணைத்தின்ன, நொண்டிக்குதீரை வந்து.)

எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணை மண்ணைத் தின்னு கையில் குருட்டுக் கழுதை கோதுமை ரொட்டிக்கு அழுகிற தாம்.

எண்ணம் அற்ற ராஜா பன்றிவேட்டை ஆடினாற்போல். 5005

(என்னச் சுற்ற.)

எண்ணம் இட்டவன் தூங்கான்; ஏடு எடுத்தவனும் தூங்கான்.

எண்ணம் எல்லாம் பொய்; எமன் ஓலை மெய்.

எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய்.

எண்ணம் எல்லாம் பொய்; ஏளிதம் மெய்.

(ஏளனம்.)

எண்ணம் எல்லாம் பொய்; மெளனமே மெய். 5010

எண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

எண்ணிச் சுட்டது தேசை.

எண்ணிச் செய்கிறவன் செட்டி; எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

எண்ணிச் சுட்ட பணியாரம், பேணித் தின்னு மருமகனே மருமகனே.

(மாப்பிள்ளை.)

எண்ணிச் செட்டுப் பண்ணு; எண்ணாமல் சாகுபடி பண்ணு. 5015

எண்ணிச் செய்வது செட்டு; எண்ணாமல் செய்வது வேளாண்மை.

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு.

(குறள்.)

எண்ணிப் பார் குடித்தனத்தை; எண்ணாதே பார் வேளாண்மையை.

எண்ண முடியாது; ஏட்டில் அடங்காது.

எண்ணிய எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய். 5020

எண்ணிய எண்ணம் என்னடி? அண்ணா என்று அழைத்த முறை என்னடி?