216
தமிழ்ப் பழமொழிகள்
எண்ணிய ஒரு குடிக்கு ஒரு மின்னிய குடி.
எண்ணினேன் ஒரு கோடி, இழப்பது அறியாமல்.
எண்ணும் எழுத்தும் கண்ணும் கருத்தும்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். 5025
எண்ணெய் இல்லாத பந்தம், எரியுதடி தங்கம்.
எண்ணெய்க்குச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கிறதில்லை.
எண்ணெய்க் குடத்தில் குளிப்பாட்டின ஆனைக்குட்டி போல.
எண்ணெய்க் குடத்திலே பிடுங்கி எடுத்தாற் போல.
எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு போல. 5030
எண்ணெய்க் குடம் உடைந்தவளும் அழுகிறாள்; தண்ணீர்க்குடம் உடைந்தவளும் அழுகிறாள்?
எண்ணெய்க் குடம் உடைந்தாலும் ஐயோ! தண்ணீர்க்குடம் உடைந்தாலும் ஐயோ!
எண்ணெய்க் குடம் போட்டவனும் அப்பாடா. அம்மாடி; தண்ணீர்க் குடம் போட்டவனும் அப்பாடி, அம்மாடி,
எண்ணெய்க் குடமும் வெறும் குடமும் முட்டினால் எதற்குச் சேதம்?
எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக் கொண்டு சீப்புக் கண்ட இடத்தில் தலை வாரிக் கொள்கிறது. 5035
- (தலை சீவி.)
எண்ணெய் காணாத மயிரும் தண்ணீர் காணாத பயிரும்.
எண்ணெய் குடித்த நாய் திண்ணையில் கிடக்க, எதிரே வந்த நாய் உதைபட்டது மாதிரி.
- (குடித்த நாய் இருக்க.)
எண்ணெய்ச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கவில்லை.
- (செலவே ஒழிய, பிழைக்காது, பிழைத்தபாடு இல்லை.)
எண்ணெய் தடவிக் கொண்டு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவது தானே ஒட்டும்?
எண்ணெய்ப் பிள்ளையோ? வண்ணப் பிள்ளையோ? 5040
எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டோ?
எண்ணெய் முந்துமோ? திரி முந்துமா?
- (எண்ணெய் மிஞ்சுமோ?)
எண்ணெயில் இட்ட அப்பம் போலக் குதிக்கிறான்.
எண்ணெயில் விழுந்த ஈயைப் போல.