220
தமிழ்ப் பழமொழிகள்
எமன் பிடித்தால் எவன் பிழைப்பான்?
எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா? 5120
எமன் வாயிலிருந்து மீண்டது போல.
- (வந்தது போல.)
எமனுக்கு வழி காட்டுவான்.
எமனைப் பலகாரம் பண்ணிச் சுப்பிரமணியனைத் துவையல் அரைத்தாற் போல.
எமனையும் நமனையும் பலகாரம் செய்வான்.
எய்த்து இளைத்த நாய் போல ஓடி வருகிறான். 5125
எய்தவன் இருக்க அம்பை நோகலாமா?
எய்தவன் எய்தால் அம்பு என்ன செய்யும்?
எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்காதே.
- (தீயில் வார்த்தாற் போல்.)
எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளியது போல. 5130
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
- (இழுத்தால்.)
எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற் போல்.
எரிகிற நெருப்பில் தண்ணீரைக் கொட்டலாமா?
எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டு அடக்கலாமா?
- (எண்ணெய் ஊற்றியது போல.)
எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி. 5135
எரிகிற நெருப்பை ஊதிக் கெடுத்தது போல.
எரிகிற புண்ணில் எண்ணெய் விட்டது போல.
எரிகிற புண்ணில் புளி இட்டது போல.
எரிகிற மூக்கில் திரியைக் கொளுத்தினாற் போல.
எரிகிற விளக்கில் எண்ணெய் விட்ட மாதிரி. 5140
எரிகிற விளக்கு ஆனாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
எரிகிற வீட்டில் எண்ணெயை ஊற்றினாற் போல்.
எரிகிற வீட்டில் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டான்.