தமிழ்ப் பழமொழிகள்
221
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
- (எடுத்தது. )
எரிகிற வீட்டை அணைக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல. 5145
எரிச்சல் வந்தல்லவோ அடிக்கும்? எழுப்பி விட்டா அடிக்கும்?
எரிந்த பசியில் இழந்த மணியைத் தேடிப் போனாற் போல.
எரிநெருப்பை எண்ணெய் விட்டு அணைக்கலாமா?
எரிப்புக்கு ஆற்றாமல் ஏர் உழப் போகிறேன்; கஞ்சியுடனே சாறு கொண்டு வா என்ற கதை.
எரிப்புக்காரன் பின்னோடு போனாலும் போகலாம்; செருப்புக்காரன் பின்னோடு போகக் கூடாது. 5150
எரியும் உடம்பில் எண்ணெய் வார்த்தாற்போல்.
எரியும் கொள்ளியை ஏறத் தள்ளாதே.
எரு இல்லாப் பயிர் மாடு இல்லாக் கன்று போல.
எரு இல்லா வயல் கன்று இல்லா மாட்டுக்குச் சமம்.
- (பயிர்.)
எரு இல்லையேல் மறு பயிரும் இல்லை. 5155
எரு உள்ள காட்டில் மடையனும் பயிர் செய்வான்.
எருக்கம் புதரில் மறைந்து ஆனையை வெகுள்விப்பான் போல.
எருக்கிலைக்கு மருக்கொழுந்து வாசனையா?
எருக்குழியின்றி ஏர் பிடியாதே.
எருக்கைச் சொடுக்க வேணும்; ஈச்சைக் கிழிக்க வேணும். 5160
எருக்கை வெட்டி அடித்து ஏரைக் கட்டி உழு.
எருச் செய்கிறது இனத்தான் செய்ய மாட்டான்.
எருதாலம்மாவுக்குக் கல்யாணம்; எரு முட்டைப் பணியாரம்.
எருதில் ஏழை உண்டா?
எருதின் நோய் காக்கை அறியுமா? 5165
எருதின் புண்ணுக்குச் சாம்பல் மருந்து.
எருது இளைத்தால் எல்லாம் இளைக்கும்.
எருது இளைத்தால் காக்கை மச்சான் முறை வைத்துக் கூப்பிடும்.
எருது ஈன்றது என்றால் தோட்டத்திலே கட்டு என்பது போல.
- (தொழுவத்திலே-கொட்டகையிலே.)
எருது ஈன்றது என்னுமுன் என்ன கன்று என்றது போல. 5170