222
தமிழ்ப் பழமொழிகள்
எருது உழவுக்குக் காய்கிறது; உண்ணி எதற்குக் காய்கிறது?
எருது உழுகிறதாம்; உண்ணி விடாய்க்கிறதாம்.
- (உண்ணிக்கு நாக்கு வாங்குகிறதாம்.)
எருது ஏழை ஆனால் பசு பத்தினித்துவம் கொண்டாடும்.
எருது ஏறாதவரையும் பசு பத்தினி கொண்டாடும்.
எருதுக்குச் சூடு போட்டது போல. 5175
- (எருமைக்கு.)
எருதுக்கு நோய் வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா?
எருதுக்கும் தன் புண் அழற்சி; காக்கைக்கும் தன் பசி அழற்சி.
எருது கூடா விட்டால் பசு பத்தினி விரதம் கொண்டாடும்.
எருது கெட்டார்க்கும் எட்டுக் கடுக்காய்; இளம் பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டுக் கடுக்காய்.
எருது கெடுத்தார்க்கும் ஏழே கடுக்காய்; ஈனாப் பெண்டிர்க்கும், ஏழே கடுக்காய், படை எடுத்த மன்னர்க்கும் ஏழே கடுக்காய். 5180
- (இளம் பிள்ளைத் தாய்ச்சிக்கும் ஏழே கடுக்காய், எட்டே கடுக்காய்.)
எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது; பறையன் கொழுத்தால் பாயில் இருக்க மாட்டான்.
எருது கோபம் கொண்டு பரதேசம் போனது போல.
எருது சுமந்தது; கோணி கொண்டது.
எருது தன் நோயை நினைக்கும்; காக்கை தன் பசியை நினைக்கும்.
எருது நினைத்த இடத்தில் தோழம் கட்டுகிறதா? 5185
- (தோழம்-தொழுவம்.)
எருது நினைத்த இடத்தில் புன்செய்க்கு உழுகிறதா?
எருது நினைத்தால் கொட்டகை கட்டுகிறதா?
எருது நோய் உண்ணிக்கு என்ன தெரியும்?
எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
- (காக்கை அறியுமா?)
எருது நோயை நினைக்கும்; காக்கை பசியை நினைக்கும். 5190
எருது பொதி சுமந்தாற் போல.
எருதும் எருதும் போராட நடுப்புல்லுத் தேய்ந்தாற் போல.
எருதும் வண்டியும் ஒத்தால் மேடு எது? பள்ளம் ஏது?
எருது மறைவில் புல்லுத் தின்கிறாயா?
எருப் போட்டவன் காடு விளையுமா? ஏர் உறிஞ்சாக் காடு விளையுமா? என்றாற் போல. 5195