பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

225


எல்லாம் கிடக்கக் கிழவனைத் தூக்கி மணையில் வைத்தாளாம். 5240

எல்லாம் சரி என்று எண்ணலாமா?

எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப் பானையில் கையை விட்டான்.

எல்லாம் சொல்லும் பல்லி கழுநீர்ப் பானையில் விழுந்ததாம் துள்ளி.

(காடிப் பானையில்.)

எல்லாம் தபோபலத்தால் கைகூடும்.

எல்லாம் தெரிந்த நாரி, நிமிண்டி ஏற்றடி விளக்கை. 5245

(நிமிர்த்தி.)

எல்லாம் தெரிந்தவர்களுக்குக் கொஞ்சம் தெரியாது.

எல்லாம் தெரியும்; ஒன்றும் தெரியாது.

(ஒன்று.)

எல்லாம் மாயை என்கிறதைக் கண்டேன்.

எல்லா மீனுக்கும் பெரிய மீன் நான்தான்.

எல்லார் தலையிலும் எட்டு எழுத்து; பாவி தலையில் பத்து எழுத்து. 5250

எல்லார் வீட்டுத் தோசையிலும் ஓட்டை.

எல்லாருக்கும் உண்டு இலையும் பழுப்பும்.

(எல்லாவற்றுக்கும்.)

எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது.

எல்லாருக்கும் சளி துரும்பு போல; எனக்குச் சளி மலை போல.

எல்லாருக்கும் சொல்லும் பல்லி தான் போய்க் காடிப் பானையில் விழுமாம். 5255

எல்லாருக்கும் புத்தி இருந்தால் புத்தி இல்லாதவன் ஆர்?

எல்லாருக்கும் ஆளின் கீழே நுழைந்தால், இவன் ஆளின் நிழலின் கீழே நுழைவான்.

எல்லாரும் ஆளை மேய்ந்தால், இவன் அவன் நிழலை மேய்ப்பான்.

எல்லாரும் உலர்த்தினார்கள் என்று எலியும் தன் வாலை உலர்த்தியதாம்.

எல்லாரும் உழுதார்களென்று ஈழவனும் உழுதானாம். 5260

எல்லாரும் எல்லாரும் என் தலையில் குட்டுகிறார்; என்னைப் பெற்ற தாயாரும் என் தலையில் குட்டுகிறாள்.

எல்லாரும் என் மண்டையில் பொங்கித் தின்கிறார்கள்.