தமிழ்ப் பழமொழிகள்
21
அடித்தா பால் புகட்டுகிறது? 365
அடித்தால் அடி மறக்காது; அம்பு போட்டால் அம்பு பாயாது; சொன்னால் சொல் பிறக்காது;
அடித்தால் கூட அழத் தெரியாது.
அடித்தால் முதுகில் அடி, வயிற்றில் அடிக்காதே.
அடித்தாலும் புடைத்தாலும் என் அகமுடையான்; அடுப்புக் கொழுக்கட்டையைத் தொடாதே.
அடித்தாலும் புருஷன், அணைத்தாலும் புருஷன். 370
- (பா-ம்) புடைத்தாலும் புருஷன்.
அடித்தாற் போல அடிக்கிறேன்; நீ அழுகிறது போல அழு.
அடித்தான் ஐயா பிரைஸ், காது அறுந்த ஊசி.
அடித்தான் பிடித்தான் வியாபாரம்.
அடித்து அழ விட்டால் அது ஒரு விளையாட்டா?
அடித்துப் பழுத்தது பழமா? 375
அடித்துப் பால் புகட்டுகிறதா?
அடித்துப் போட்ட நாய் மாதிரி கிடக்கிறான்.
அடித்து வளர்க்காத பிள்ளையும் இல்லை; முறித்து வளர்க்காத முருங்கையும் இல்லை.
அடித்து வளர்க்காத பிள்ளையும் ஊட்டி வளர்க்காத கன்றும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறித்து வளர்க்காத முருங்கையும். 380
- (இல்லை.)
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்.
- (செவ்வை ஆகா. )
அடித்து விட்டவன் பின்னே போனாலும் பிடித்து விட்டவன் பின்னே போகலாகாது.
அடி தெற்றினால் ஆனையும் சறுக்கும்;
அடி நாக்கில் நஞ்சு; நுனி நாக்கில் அமிழ்தம்.
அடி நொச்சி; நுனி ஆமணக்கா? 385
- (அடி நா, நுனி நா.)
அடிப்பதும் ஒரு கை; அணைப்பதும் ஒரு கை.
அடிப்பானேன்? பிடிப்பானேன்? அடக்குகிற வழியிலே அடக்குவோம்.
அடிபட்ட நாய் போல.
அடிபட்ட நாயைப் போல் காலைத் தூக்கி நடவாதே.
அடிபட்டவன் அழுவான். 390
அடிபட்டாலும் ஆர்க்காட்டுச் சடாவால் அடிபட வேண்டும்.
அடி பெண்ணே சோறு ஆச்சா? நொடிக்குள்ளே சோறு ஆச்சு.