பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தமிழ்ப் பழமொழிகள்


எழுதுகிறது பெரிது அல்ல; இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது.

எழுதுவது அருமை; எழுதினதைப் பழுதற வாசிப்பது அதிலும் அருமை.

எழுந்ததும் தொழு; தொழுததும் படு.

எழுந்தருளும் கோவிலுக்கு விளக்குப் பிடிக்க. 5365

எழுந்திருக்கச் சொன்னவர்கள் என் பாவம் கொண்டவர்கள்.

எழுந்திருக்கப் பால் மாறி இல்லை என்றாளாம் பிச்சை,

எழுந்திருப்பான்; கால் இல்லை.

எழுப்பவோ, துஞ்சு புலியைத் துயில்.

(பழமொழி நானூறு.)

எழுபது சொன்னாலும் பறை ஏவினால்தான் செய்யும். 5370

எழுபது பேரைக் கொன்ற படுநீலி.

(நீலி கதை.)

எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.

எள் உருண்டை போல.

(சிறுமை.)

எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருவான்.

எள் என்பதற்கு முன்னே எண்ணெய் எங்கே என்கிறான். 5375

எள் ஏன் காயுது? எள் எண்ணெய்க்கு; எலிப் புழுக்கை ஏன் காயுது? கூடக் கிடந்த குற்றத்துக்கு.

(யாழ்ப்பாண வழக்கு)

எள் போட்டால் எள் விழாது.

எள் விதைத்த காட்டில் கொள் முளையாது.

எள் விதைத்தால் துவரை விளையுமா?

எள் விழுந்தால் எடுக்க மகா சேனை; இடறி விழுந்தால் எடுக்க மனிதர் இல்லையே! 5380

எள் விழுந்தால் கீழே விழாது.

எள்ளிலும் சின்ன இலை என்ன இலை? விடத்தாரி இலை.

எள்ளுக்காய் பிளந்த விவகாரம்.

எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேச வேண்டும்.

எள்ளுக்காய் முள்ளுத் தெறிப்பது போல. 5385