230
தமிழ்ப் பழமொழிகள்
எழுதுகிறது பெரிது அல்ல; இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது.
எழுதுவது அருமை; எழுதினதைப் பழுதற வாசிப்பது அதிலும் அருமை.
எழுந்ததும் தொழு; தொழுததும் படு.
எழுந்தருளும் கோவிலுக்கு விளக்குப் பிடிக்க. 5365
எழுந்திருக்கச் சொன்னவர்கள் என் பாவம் கொண்டவர்கள்.
எழுந்திருக்கப் பால் மாறி இல்லை என்றாளாம் பிச்சை,
எழுந்திருப்பான்; கால் இல்லை.
எழுப்பவோ, துஞ்சு புலியைத் துயில்.
- (பழமொழி நானூறு.)
எழுபது சொன்னாலும் பறை ஏவினால்தான் செய்யும். 5370
எழுபது பேரைக் கொன்ற படுநீலி.
- (நீலி கதை.)
எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.
எள் உருண்டை போல.
- (சிறுமை.)
எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருவான்.
எள் என்பதற்கு முன்னே எண்ணெய் எங்கே என்கிறான். 5375
எள் ஏன் காயுது? எள் எண்ணெய்க்கு; எலிப் புழுக்கை ஏன் காயுது? கூடக் கிடந்த குற்றத்துக்கு.
- (யாழ்ப்பாண வழக்கு)
எள் போட்டால் எள் விழாது.
எள் விதைத்த காட்டில் கொள் முளையாது.
எள் விதைத்தால் துவரை விளையுமா?
எள் விழுந்தால் எடுக்க மகா சேனை; இடறி விழுந்தால் எடுக்க மனிதர் இல்லையே! 5380
எள் விழுந்தால் கீழே விழாது.
எள்ளிலும் சின்ன இலை என்ன இலை? விடத்தாரி இலை.
எள்ளுக்காய் பிளந்த விவகாரம்.
எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேச வேண்டும்.
எள்ளுக்காய் முள்ளுத் தெறிப்பது போல. 5385