பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

231


எள்ளுக்கு ஏழு உழவு உழுகிற வேளை, வேளாளா, கொள்ளுக்கு

  ஓர் உழவு உழுது பயிர் செய். 

எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு.

எள்ளுக்குத் தக்க எண்ணெய், எண்ணெய்க்குத் தகுந்த பிண்ணாக்கு.

  :(எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.)  

எள்ளுக்குப் புள்ளு வரும்; எச்சிற்கு எறும்பு வரும்.

எள்ளுக்குள் எண்ணெய் போல. 5390

எள்ளுக்குள் எண்ணெய் எங்கும் நிறைந்திருக்கும்.

(எண்ணெய் போல.)

எள்ளுக் குறுணி; எலி முக்குறுணி.

எள்ளுடன் ஏதோ காய்கிறது என்பார்கள்.

எள்ளுத்தான் எண்ணெய்க்குக் காய்கிறது; எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது? கூடக் கிடந்த பாவம்.

எள்ளுத் தின்றால் எள்ளளவு பசி தீரும். 5395

(எள்ளைத் தின்றால்.)

எள்ளுப் பயிரானாலும் நெல்லுப் பயிர் செய்.

எள்ளுப் பயிருக்கு எழுபது நாள்.

எள்ளுப் போட்டால் எள் எடுக்கப் போகாது.

(விழாது.)

எள்ளும் அரிசியும் கலந்தாற் போல.

எள்ளும் கரும்பும் இறுக்கினாற் பலன் தரும். 5400

எள்ளும் கரும்பும் எடுக்கும் பயிராம்.

எள்ளும் கொள்ளும் எழுபது நாள்.

எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டியதுதான்.

எள்ளும் தண்ணீரும் கரத்தில் ஏந்திச் செல்கிறான்.

எள்ளும் தண்ணீரும் விட்டுத் தத்தம் பண்ணினேன். 5405

(முகம் கழுவினேன்.)

எள்ளும் தினையும் எழுபது நாளில் பலன் தரும்.

எள்ளும் பச்சரிசியும் கலந்தாற் போல்.

எள்ளும் பச்சரியும்போல் இருக்க வேண்டும்.

எள்ளு விதைக்க எறங்காடு; கொள்ளு விதைக்கக் கல்லங்காடு.

எள்ளுள் எண்ணெய் போல். 5410