232
தமிழ்ப் பழமொழிகள்
எள்ளைத் தின்றான், எனக்கு உழைக்கிறான்.
எள்ளை நீக்கிக் கொண்டு வரப்போன பேய் எண்ணெய் கொண்டு வர இசைந்தது போல.
எள்ளைப் பிய்த்து எழுபது பேருக்குக் கொடுப்பது போல.
- (பங்கு வைப்பது போல.)
எளியவன் பிள்ளை ஆனாலும் செய்ய வேண்டிய சடங்கு செய்ய வேண்டும்.
எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துணி. 5415
எளியவனாய்ப் பிறந்தாலும் இளையவனாய்ப் பிறக்கக் கூடாது,
எளியவனுக்குப் பெண்டாட்டியாய் இருக்கிறதைவிட வலியவனுக்கு அடிமையாகிறது நலம்.
எளியவனைக் கண்டு புளியங்காய் பறிக்கிறான்.
- (அடிக்கிறான்.)
எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான்.
எளியாரை எதிரிட்டுக் கொண்டால் பிரான ஹாளி. 5420
- (கொள்ளலாமா?)
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும்.
எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
- (அடித்தால்.)
எற்று சால் எண்ணாயிரம் பொன்.
- (விநாயகர் கணக்குப் பிள்ளையாக வந்து மன்னனிடம் சொன்னது, )
எறிகிறது முயலுக்கு; படுகிறது பற்றைக்கு.
எறிச்ச கறி பழையமுது எந்நாளும் கிடைக்குமா? 5425
எறிந்த கல் விழுகிற மட்டும்.
எறிந்த கல்லைக் கவுளிற் கொண்ட களிறு போல.
எறிவார் கையிலே கல்லைக் கொடுக்கிறதா?
எறிவானேன்? சொறிவானேன்?
எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது; ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறிது. 5430
எறும்பு ஆனை ஆகுமா? துரும்பு தூண் ஆகுமா?
எறும்பு இட்டலியைத் தூக்கியது போல.
எறும்பு ஊர்வது போல.