பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

233


எறும்பு ஊர இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்.

எறும்பு ஊரக் கல்லும் தேயும். 5435

(கற்குழியும்.)

எறும்பு ஊரில் பெரும்புயல் வரும்.

எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறதா?

எறும்பு எண்ணாயிரம், அப்பாற் கழுதையும் கை கடந்தது என்றபடி.

(தண்டலையார் சதகம்.)

எறும்பு எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும்.

எறும்புக் கடிக்கு மருந்தா? 5440

எறும்புக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் சமுத்திரம்.

எறும்புக்குத் தெரியாத கரும்பா?

எறும்புக்குத் தன் மூத்திரமே வெள்ளம்.

எறும்பு கட்டிய புற்றில் பாம்பு குடிபுகுந்தாற் போல்.

எறும்பு கடிக்கப் பொறுக்காதா?. 5445

எறும்பு சேர்ப்பது போல எல்லோரும் சேர்க்க வேண்டும்.

எறும்பு தின்றால் எண்ணாயிரம் காலம்.

எறும்பு தின்றால் நூறு வயசு.

எறும்பு நுழைந்த ஆனைக் காது போல.

எறும்பு நுழைய இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான். 5450

எறும்புப் புற்றில் பாம்பு குடி கொள்வது போல.

எறும்பும் தன் கையால் எண் சாண்.

எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்.

எறும்பு முதல் ஆனை வரையில்.

என் காரியம் எல்லாம் நந்தன் படை வீடாய்ப் போயிற்று. 5455

என் கிண்டி லட்சம் பொன்.

என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்.

என் குடுமி அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது.

என் கை பூப்பறிக்கப் போகுமா?

என் கையிலே எலும்பு இல்லையா? 5460