பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

235


என்றும் பயப்படுவதிலும் எதிரே போதல் உத்தமம்.

என்றைக்கு இருந்தாலும் கிணற்றங்கரைப் பிள்ளையார் கிணற்றிலேதான்.

என்றைக்கு இருந்தாலும் கொங்கல் காற்றோடே, குமுமம் ஆற்றோடே.

என்றைக்கு இருந்தாலும் திருடன் பெண்டாட்டி தாலி அறுக்கத்தான் வேண்டும்.

என்றைக்கு இருந்தாலும் திருமழபாடி ஆற்றோடே.

என்றைக்கும் போடாத லட்சுமி இன்றும் போடவில்லை; தினம் போடுகிற தேவடியாளுக்கு இன்றைக்கு என்ன கேடு வந்தது? 5490

(போடுகிறவளுக்கு.)

என்ன, சின்னமலைக் கவுண்டன் அதிகாரம் போல் இருக்கிறதே!

(சின்னமலைக் கவுண்டன் கொங்குநாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்தவன்.)

என்ன சொன்னாலும் என் புத்தி போகாது.

என்னடா அப்பா என்றானாம்; எலி அம்மணமாய் ஓடுகிறது என்றானாம்.

என்னடா ஒன்று ஒன்றாகக் குருவி போலப் கொரிக்கிறாய்?

என்னடா. குச்சுக் கட்டிப் பேசுகிறாய். 5495

என்னடா கெட்டுப் போனாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன், பந்தயம் போடு என்கிறான்.

என்னடா சவுக்கம் கட்டிப் பேசுகிறாய்?

என்னடா தாதா, புரட்டாசி மாசம் முப்பதும் ஒரு கந்தாயம்.

என்னடா பிரம்ம வித்தையோ?

என்னடி அம்மா தெற்கத்தியாள், எந்நேரம் பார்த்தாலும் தொள்ளைக் காது. 5500

என்னடி பெண்ணே கும்மாளம் என்றால் சின்ன மச்சானுக்குக் கல்யாணம்.

என்ன தின்றாலும் அதற்கு மேல் நாலு பேரீச்சம் பழம் தின்றால் எல்லாம் அடிபடும்.

(செரிக்கும்.)