22
தமிழ்ப் பழமொழிகள்
அடிபோன சட்டி ஆயா வீட்டில் இருந்தால் என்ன? மாமியார் வீட்டில் இருந்தால் என்ன?
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
- (பா-ம்.) தேயும்,
அடிமை படைத்தால் ஆள்வது கடன். 395
அடியடா செருப்பாலே அறுநூறு; இந்தாடா நாயே திருநீறு.
அடியாத பிள்ளை படியாது.
- (பணியாது.)
அடியாத மாடு படியாது.
அடியில் உள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.
அடியுண்ட வேங்கை போல. 400
அடியும் நுனியும் தறித்த கட்டை போல.
அடியும் பட்டுவிட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்?
அடியும் பிடியும் சரி.
அடியே என்பதற்கு அகமுடையான் இல்லை; பிள்ளை பேர் சந்தான கோபால கிருஷ்ணன்.
அடியைக் காத்து முடியை அடித்துக் கொண்டு போச்சு. 405
அடியைப் பிடியடா பாரத பட்டா!
அடியை விட ஆவலாதி பெரியது.
அடியோடு அடிக் கரணம்.
அடிவண்டிக் கிடாப் போலே.
அடிவயிற்றில் இடி விழுந்தாற் போல. 410
அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல.
அடிவயிற்றில் புளியைக் கரைக்கிறது.
அடிவானம் கறுத்தால் ஆண்டை வீடு வலுக்கும்.
அடுக்கல் குத்தினால், நடுக்கல் குத்துவாள்.
அடுக்களை உறவு இல்லாமல் அம்பலத்து உறவா? 415
அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற் போல்.
அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஓர் ஆணும்.
- (இருக்கிறது என்கிறான்.)
அடுக்களைக் குற்றம் சோறு குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது.
- (துடுப்பால் குழைந்தது.)
அடுக்களைப் பூனைபோல் இடுக்கிலே ஒளிக்கிறது.
அடுக்களைப் பெண்ணுக்கு அழகு வேண்டுமா? 420
- (எதற்கு?)