240
தமிழ்ப் பழமொழிகள்
ஏணிக் கொம்புக்குக் கோணற் கொம்பு போடலாமா?
- (ஏணிக் கழிக்கு.)
ஏணி, தோணி, வாத்தியார், நாரத்தங்காய். 5580
- (அண்ணாவி.)
ஏணியைத் தள்ளிவிட்டுப் பரண்மேல் ஏறலாமா?
ஏணி வைத்தாலும் எட்டாது.
ஏணைக் கழிக்குக் கோணற் கழி வெட்டுகிறதா?
ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டாற்போல்.
- (தேவாரம்.)
எது என்று கேட்பாரும் இல்லை; எடுத்துப் பிடிப்பாரும் இல்லை. 5585
ஏதுக்கு வீணும் சாணும்.
ஏதும் அற்றவனுக்கு எரிமுட்டைப் பாளையம் திருவிழா; போக்கற்றவனுக்குப் பொன்னேரித் திருவிழா.
ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?
ஏதும் இல்லை, எக்காந்தமும் இல்லை; பூநாகம்.
ஏந்தாழை என்றால் கோந்தாழை. 5590
ஏப்பம் பரிபூரணம்; சாப்பாடு பூஜ்யம்.
ஏமாந்த சோணகிரி.
ஏமாந்தால் நாமம் போடுவான்; இணைப்பு ஒட்டவில்லை.
ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.
- (மேய்த்தால்.)
ஏர் அற்றவன் இரப்பாளி. 5595
ஏர் அற்றுப் போனால் சீர் அற்றுப் போகும்.
ஏர் உழுகிறது; கன்னி கரைகிறது.
ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போனால் போகிறது; பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.
ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மைத்துனன் முறை கொண்டாடும்.
- (மச்சான் முறை.)