பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தமிழ்ப் பழமொழிகள்


ஐம்பதாம் பிராயத்திலே கருக்கோலை கட்டிச் சாகிற காலத்தில் பிச்சோலை கட்டினாளாம். 5785

(அருக்கோலை கட்டி.)

ஐம்பதிலே அறிவு; அறுபதிலே அடக்கம்; அதற்கு மேல் ஒன்றும் இல்லை.

ஐம்பதுக்கு மேலே மண் பவழம் கட்டுகிறதா?

ஐம்பது வந்தாலும் அவசரம் கூடாது.

ஐம்பது வயசிலே ஆண்பிள்ளைக்கு மறு மகிழ்ச்சி.

ஐம்பது வயசு ஆனவனுக்கு அஞ்சு வயசுப் பெண்ணா? 5790

ஐம்பது வயசு ஆனவனுக்கு அரிவை ஏன்?

ஐயங்கார் அம்மானையில் சறுக்கினார்.

(ஐயங்கார்-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.)

ஐயங்காரும் தத்துக் கொடுப்பார்.

(தொத்து.)

ஐயங்காரைக் கெடுத்தவள் ஐயங்காரிச்சி, தாதச்சியைக் கெடுத்தவன் தாதன்.

ஐயப்பட்டால் பைய நட. 5795

ஐயப்பன் குதிரையை வையாளி விட்டாற் போல.

(விட்ட கதை.)

ஐயப்பா கையை விடு.

ஐயம் ஆன காரியத்தைச் செய்தல் ஆகாது.

ஐயம் உண்டானால் பயம் உண்டு.

ஐயம் ஏற்றும் அறிவே ஓது. 5800

ஐயம் தீர்ந்தும் நெஞ்சு ஆறவில்லை.

ஐயம்பேட்டைத் துலுக்கன் போல்.

(வலுச்சண்டைக்கு வருவான்.)

ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார்கள் இடம் கொடார்கள்.

ஐயர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான்.

ஐயர் உருள; அம்மை திரள. 5805