தமிழ்ப் பழமொழிகள்
251
ஐயர் என்பவர் துய்யர் ஆவர்.
ஐயர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை.
ஐயர் தின்னும் பருப்பு ஐந்து குடி கெடுக்கும்.
ஐயர் பாதி, அரண்மனை பாதி.
- (புதுக்கோட்டையில்.)
ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா? 5810
ஐயருக்கு அரை வார்த்தை சொல்; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே.
ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக் கூடாது.
ஐயன் அளந்த படி.
ஐயன் பாழியில் ஆனை போர்க்கு உதவுமோ?
ஐயனார் கோயில் ஆனையைப் போல. 5815
ஐயனார் கோயில் செங்கல் அத்தனையும் பிடாரி.
- (தெய்வம்.)
ஐயனார் கோயில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திர காளி.
- (அடிமண்ணை மிதித்தவர், அத்தனை பேரும் பிடாரி.)
ஐயனார் கோயிலிலே ஆனை பிடிக்க வேண்டும்.
ஐயனார் படையில் குயவனார் பட்டது போல.
ஐயனாரே வாரும்; கடாவைக் கொள்ளும். 5820
ஐயா, ஐயா, அம்மா குறைக் கேழ்வரகும் அரைக்க வரச் சொன்னாள்.
ஐயா கதிர் போல; அம்மா குதிர் போல.
ஐயாசாமிக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு.
- (ஐயாத்துரைக்கு.)
ஐயா சொல்படி காலைக் கிளப்படி.
ஐயாட்டுக் கிடைக்குச் சமம் தை உழவு. 5825
ஐயாத்துரைக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே; வெற்றிலை பாக்குக் கடையிலே; சுண்ணாம்பு சூளையிலே.
- (கொட்டு முழக்கு.)