பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

251


ஐயர் என்பவர் துய்யர் ஆவர்.

ஐயர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை.

ஐயர் தின்னும் பருப்பு ஐந்து குடி கெடுக்கும்.

ஐயர் பாதி, அரண்மனை பாதி.

(புதுக்கோட்டையில்.)

ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா? 5810

ஐயருக்கு அரை வார்த்தை சொல்; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே.

ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக் கூடாது.

ஐயன் அளந்த படி.

ஐயன் பாழியில் ஆனை போர்க்கு உதவுமோ?

ஐயனார் கோயில் ஆனையைப் போல. 5815

ஐயனார் கோயில் செங்கல் அத்தனையும் பிடாரி.

(தெய்வம்.)

ஐயனார் கோயில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திர காளி.

(அடிமண்ணை மிதித்தவர், அத்தனை பேரும் பிடாரி.)

ஐயனார் கோயிலிலே ஆனை பிடிக்க வேண்டும்.

ஐயனார் படையில் குயவனார் பட்டது போல.

ஐயனாரே வாரும்; கடாவைக் கொள்ளும். 5820

ஐயா, ஐயா, அம்மா குறைக் கேழ்வரகும் அரைக்க வரச் சொன்னாள்.

ஐயா கதிர் போல; அம்மா குதிர் போல.

ஐயாசாமிக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு.

(ஐயாத்துரைக்கு.)

ஐயா சொல்படி காலைக் கிளப்படி.

ஐயாட்டுக் கிடைக்குச் சமம் தை உழவு. 5825

ஐயாத்துரைக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே; வெற்றிலை பாக்குக் கடையிலே; சுண்ணாம்பு சூளையிலே.

(கொட்டு முழக்கு.)