பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தமிழ்ப் பழமொழிகள்


அடுத்து அடுத்துப் போனால் அடுத்த வீடும் பகை.

அடுத்துக் கெடுப்பவர்.

அடுத்துக் கெடுப்பான் கபடன்; கொடுத்துக் கெடுப்பான் மார்வாடி; தொடுத்துக் கெடுப்பாள் மடந்தை.

(தொடர்ந்து கெடுப்பாள் வேசி.)

அடுத்துச் சொன்னால் எடுத்த காரியம் முடியும். 445

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும்.

(வாக்குண்டாம்.)

அடுத்து வந்தவனுக்கு ஆதரவு சொல்கிறவன் குரு.

அடுப்பங் கரையே கைலாசம், அகமுடையானே சொர்க்க லோகம்.

அடுப்பங் கரையே சொர்க்கம்; அகமுடையானே தெய்வம்.

அடுப்பங் கரையே திருப்பதி; அகமுடையானே கைலாசம். 450

அடுப்பு அடியில் பூனை தூங்க.

அடுப்பு அடியில் வெண்ணெய் வைத்த கதை.

அடுப்பு ஊதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?

அடுப்பு எரிந்தால்தானே பொரி பொரியும்?

அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்; தாயார் செத்தால் வயிறு எரியும். 455

அடுப்பு எரியாத கோபத்தை அகமுடையான்மேல் காட்டினாளாம்.

(அம்மையார் மேல்.)

அடுப்புக் கட்டிக்கு அழகு வேணுமா?

அடுப்புக் கரகரப்பும் அகமுடையான் முணுமுணுப்பும்.

அடுப்புக்கு ஒரு துடுப்பா?

அடுப்புக்குத் தகுந்த உலை, அகமுடையானுக்குத் தகுந்த இறுமாப்பு. 460

அடுப்புக் குற்றம் சாதம் குழைந்தது: அகமுடையான் குற்றம் பெண் பிறந்தது.

அடுப்பு நெருப்பும் போய் வாய்த் தவிடும் போச்சு.

(வாய்த்த மனைவியும் போனாள்.)

அடுப்பும் நெருப்பும் பயப்படுமா?

(யாழ்ப்பாண வழக்கு.)

அடுப்பே திருப்பதி; அகமுடையானே குலதெய்வம்.

அடே அத்தான் அத்தான். அம்மான் பண்ணினாற் போல் இருக்க வில்லையடா. 465

(இடக்கர்.)