பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

27


அண்ணன் தம்பி வேண்டும், இன்னம் தம்பிரானே.

அண்ணன்தான் கூடப்பிறந்தான்; அண்ணியும் கூடப் பிறந்தாளோ?

அண்ணன்தான் சொந்தம்; அண்ணியுமா சொந்தம்? 515

அண்ணன் பிள்ளையை நம்புகிறதற்குத் தென்னம் பிள்ளையை நம்பலாம்.

(பிள்ளையை வளர்ப்பதை விட.)

அண்ணன் பிறந்து அடிமட்டம் ஆச்சு; தம்பி பிறந்து தரைமட்டம் ஆச்சு.

அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி; தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி.

அண்ணன் பெரியவன்; அப்பா அடுப்பூது.

(சிற்றப்பா.)

அண்ணன் பெரியவன்; அப்பா நெருப்பெடு என்கிற கதை. 520

அண்ணன் பெரியவன்; சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா.

அண்ணன் பேச்சைத் தட்டவும் மாட்டேன்; மேலைப் பங்கை விடவும் மாட்டேன்.

அண்ணன் பேரில் இருந்த கோபத்தை நாய்பேரில் ஆற்றினான்.

அண்ணன் வரும் வரையில் அமாவாசை நிற்குமா?

அண்ணனார் சேனையிலே அள்ளிப் போகிறான். 525

(போகிறாள்.)

அண்ணனிடத்தில் ஆறு மாசம் வாழ்ந்தாலும் அண்ணியிடத்தில் அரை நிமிஷம் வாழலாமா?

(அரை நாழிகை.)

அண்ணனுக்குத் தங்கை அபஸரஸ் ஸ்திரீ.

அண்ணனுக்குத் தம்பி அல்ல என்று போகுமா?

அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள்.

(வீட்டாள்.)

அண்ணனை அகம் காக்க வைத்துவிட்டு மன்னி மல்லுக்குப் போனாளாம். 530

(மதனி.)

அண்ணனைக் கண்டாயோ என்று போய்விட்டான்.

அண்ணனைக் கொன்ற பழியைச் சந்தையிலே தீர்த்துக் கொள்கிறது போல.

அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது போல.

அண்ணா சம்பாதிப்பது அம்பி அரைஞாண் கயிற்றுக்கும் பற்றாது.

அண்ணா செத்த பிறகு மன்னியிடம் உறவா? 535