28
தமிழ்ப் பழமொழிகள்
அண்ணாண்டி வாரும்; சண்டையை ஒப்புக் கொள்ளும்.
அண்ணா நங்கை அப்ஸ்ர ஸ்திரீ.
அண்ணாதூர் பாடை, ஆலம்பாக்கத்து ஓடை, சதண்டி வைக்கோற் போர்.
- (அண்ணாதுாரில் பிணத்தாழி கட்டித் தொங்க விட்டிருப்பார்களாம். சதண்டி: ஓரூர்.)
அண்ணாமலைக்கு அரோ ஹரா!
அண்ணாமலைச் சாமி மின்னினாற் போலே பயணம். 540
அண்ணாமலையார் அருள் இருந்தால் மன்னார் சாமி மயிர் பிடுங்குமா?
- (மன்னார்சாமியைக் கேட்பானேன்? மன்னார்சாமி மருள் வந்து.)
அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூசை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூசை.
அண்ணாமலையில் பிறந்தவனுக்கு அருணாசல புராணம் படிக்க வேண்டுமா?
- (படிக்கத் தெரியாதா?)
அண்ணா மனசு வைத்தால் மதனிக்குப் பிள்ளை பிறக்கும்.
அண்ணா வரும் வரையில் அமாவாசை காத்திருக்காது. 545
அண்ணா வாரும்; சண்டையை ஒப்புக்கொள்ளும்.
அண்ணாவி கால் இடறினால் அதுவும் ஒரு நடைமுறை.
- (அண்ணாவி-உபாத்தியாயர், அடைமுறை.)
அண்ணாவி தவறு செய்தால் அதுவும் நடைமுறை.
அண்ணாவி நின்று கொண்டே மோண்டால் பையன் ஓடிக் கொண்டே மோள்வான்.
- (மோளுதல்-சிறுநீர் கழித்தல்.)
அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா? அம்பட்டன் பிள்ளைக்கு, மயிர் பஞ்சமா? 550
அண்ணாவுக்கும் மன்னிக்கும் அனவரதமும் பிணக்கு.
அண்ணாவுக்கு மனசு வரவேணும்; மதனி பிள்ளை பெற வேணும்.
அண்ணி ஆண்டாளு, ஆறுமுகம் கூத்தியாரு.
அணி இலாக் கவிதை பணி இலா வனிதை.
அணி எல்லாம் ஆடையின்பின். 555
- (பழமொழி நானூறு.)
அணி பூண்ட நாய் போல.
அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது; அமரத்திலே கிழிந்தாலும் கிழிந்தது.