தமிழ்ப் பழமொழிகள்
35
அந்துக் கண்ணிக்கு அழுதாலும் வரான் அகமுடையான்.
- (அந்திக் கண்ணிக்கு.)
அந்நாழி அரிசி, முந்நாழிப் பருப்பு, இருநாழி நெய்.
- (கண்ணபுரம் முனையதரையன் பொங்கல்.)
அந்நிய மாதர் அவதிக்கு உதவார்.
அநாதைக்குத் தெய்வமே துணை.
அநாதைப் பெண்ணுக்குக் கல்யாணம்; ஆளுக்குக் கொஞ்சம் உதவுங்கள். 720
அநுபோகம் மிகும்போது ஔஷதம் பலிக்கும்.
அநுமான் சீதையை இலங்கையில் தேடினது போல.
அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?
அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல.
அப்பச்சி கோவணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறது; பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது. 725
அப்படிச் சொல்லுங்கள் வழக்கை; அவன் கையில் கொடுங்கள் உழக்கை.
- (அவள்.)
அப்படிச் சொல்லு ரங்கம்.
அப்பத்துக்கு மேல் நெய் மிஞ்சிப் போச்சு.
அப்பத்துக்கு மேலே நெய் மிதந்தால் அப்பம் தெப்பம் போடும்.
அப்பத்தை எப்படித்தான் சுட்டாளோ அதற்குள் தித்திப்பை எப்படித்தான் நுழைத்தாளோ? 730
அப்பத்தைத் திருடிய பூனைகளுக்கு நியாயம் வழங்கிற்றாம் குரங்கு.
அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டும்.
அப்பம் சுட்டது சட்டியில்; அவல் இடித்தது திட்டையில்
அப்பம் சுட்டுக் கூழ் ஆச்சு; தொன்னை தைத்துக் கொள் பிராம்மணா.
அப்பம் தின்னச் சொன்னால் குழி எண்ணுவதா? 735
அப்பமும் தந்து பிட்டும் காட்டுவது போல.
அப்பர் அடைந்த ஆளும் நாள் கப்பரை எடுப்பார் சுவாமி.
- (திருச்செங்காட்டங்குடி உற்சவத்தில்.)
அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும்; உப்பின் அருமை உப்பு இல்லா விட்டால் தெரியும்.
அப்பன் ஆனைச் சவாரி செய்தால் மகனுக்குத் தழும்பா?