பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தமிழ்ப் பழமொழிகள்


அப்பன் இல்லாமல் பிள்ளை பிறக்குமா? அச்சு இல்லாமல் தேர் ஓடுமா? 740

அப்பன் சம்பாத்தியம் பிள்ளை அரைஞாணுக்கும் போதாது.

அப்பன் செத்தபின் தம்பிக்கு அழுகிறதா?

(செத்து. )

அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.

அப்பன் தர்மசாலி என்று பண்ணி விட்டான்.

அப்பன் பவிசு அறியாமல் அநேக நாள் தவிசேற மகன் கனாக் காண்கிறான். 745

அப்பன் பிண்டத்துக்கு அழுகிறான்; பிள்ளை பரமான்னத்துக்கு அழுகிறது.

அப்பன் பிறந்தது வெள்ளிமலை; ஆய் பிறந்தது பொன்மலை.

அப்பன் பெரியவன்; சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா.

அப்பன் மகன்தான் ஆண் பிள்ளைச் சிங்கம்

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான். 750

(மகன்.)

அப்பனுக்கு மூத்த சுப்பன்.

அப்பா அடித்தால் அம்மா அணைப்பது போல.

அப்பா அப்பா என்றால், ரங்கா ரங்கா என்கிறான்.

அப்பா என்றால் உச்சி குளிருமா?

அப்பாச்சிக்கு அப்புறம் மரப்பாச்சி. 755

அப்பா சாமிக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு.

அப்பா சாஸ்திரிக்குப் பெண்ணாய்ப் பிறந்து, குப்பா சாஸ்திரிக்கு வாழ்க்கைப்பட்டு, லவணம் என்றால் எருமைச் சாணி என்று தெரியாதா?

அப்பா வலக்கை; அம்மா இடக்கை.

அப்பாவி உப்பு இல்லை.

அப்பாவுக்கு இட்ட கப்பரை ஆரைச் சுவரில் கவிழ்த்திருக்கிறது. 760

அப்பாவுடன் சொல்லட்டுமா? அரக்குப் பேலாவைக் காட்டட்டுமா?

அப்பாவும் இல்லை; வெட்டுக் கத்தியும் இல்லை.

அப்பியாசம் குல விருது.

அப்பியாசம் கூசா வித்தை.

அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை. 765

அப்பைக் கொண்டு உப்பைக் கட்டு, உப்பைக் கொண்டு ஒக்கக் கட்டு.

அப்போது விஜயநகரம்; இப்போது ஆனைக்குந்தி.

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்.