38
தமிழ்ப் பழமொழிகள்
அம்பலத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற்போல.
- (கட்டுப் பொதி.)
அம்பலத்தில் பொதி அவிழ்க்கலாகாது.
அம்பலம் தீப்பட்டது என்றால், அதைத்தான் சொல்வானேன், வாய்தான் நோவானேன் என்றானாம். 795
அம்பலம் வேகிறது.
அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான்.
- (அமைத்தாற் போல.)
அம்பா பாக்கியம் சம்பா விளைந்தது; பாவி பாக்கியம் பதராய் விளைந்தது.
அம்பி கொண்டு ஆறு கடப்போர் நம்பிக்கொண்டு வால் கொள்வார்களா?
- (நரி கொள்வார்களா?)
அம்பிட்டுக் கொண்டாரே. தும்பட்டிப்பட்டர். 800
அம்பு பட்ட புண் கையில் இழை கட்டினால் ஆறாது.
- (குழை கட்டினால்.)
அம்பு விற்று அரிவாள்மனை விற்றுத் தும்பு விற்றுத் துருவுபலகை விற்றுப் போட்டால் சொல்வாயா சொல்வாயா என்றானாம்.
அம்மண தேசத்திலே கோவணம் கட்டினவன் பைத்தியக்காரன்.
அம்மணமும் இன்னலும் ஆயுசு பரியந்தமா?
அம்மன் காசு கூடப் பெறாது. 805
- (அம்மன் காசு-புதுக்கோட்டையில் வழங்கிய சிறிய காசு.)
அம்மன் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டாமா?
அம்மனுக்குப் பூஜை ஆகித்தான் சாமிக்குப் பூஜை ஆகவேணும்.
- (மதுரையில்.)
அம்மா அடித்தால் வலிக்காது; அப்பா அடித்தால் வலிக்கும்.
அம்மா ஆரோ வந்திருக்கிறார். ஆனைமேலா, குதிரைமேலா?
அம்மா குதிர் போல; அய்யா கதிர் போல. 810
அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
- (வேறா? ஒரு கேடா?)
அம்மா கோதண்டராமன்.
அம்மா திரண்டு வருவதற்குள் ஐயா உருண்டுபோய் விடுவார்.
அம்மாப் பெண் சமைக்க அஸ்தமனம்; கிருஷ்ணையர் பூஜை பண்ணக் கிழக்கு வெளுக்கும்.