பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தமிழ்ப் பழமொழிகள்


அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?

அம்மை இல்லாப் பிறந்தகமும் அகமுடையான் இல்லாப் புக்ககமும்.

அம்மைக்கு அமர்க்களம் ஆக்கிப் படை எனக்கு அமர்க்களம். பொங்கிப் படை.

அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள்.

(பரணி நூலில்.)

அம்மை குத்தினாலும் பொம்மை குத்தினாலும் வேண்டியது அரிசி. 840

அம்மையார் இருக்கும் இடத்தில சேமக் கலம் கொட்டாதே.

அம்மையார் எப்போது சாவார்? கம்பளி எப்போது நமக்கு மிச்சம் ஆகும்?

அம்மையார் நூற்கிற நூலுக்கும் பேரன் அரைஞாண் கயிற்றுக்கும் சரி.

அம்மையார் பெறுவது அரைக்காசு, தலை சிரைப்பது முக்காற் காசு.

(முழுக்காசு.)

அம்மையார் வருகிற வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா? 845

அம்மையாருக்கு என்ன துக்கம்? கந்தைத் துக்கம்.

(கற்றைத் துக்கம்.)

அம்மையாரே வாரும்; கிழவனைக் கைக்கொள்ளும்.

அம்மை வீட்டுத் தெய்வம் நம்மை விட்டுப் போமா?

அமர்க்களப்படுகிறது.

அமர்த்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம். 850

அமரபட்சம் பூர்வபட்சம்; கிருஷ்ணபட்சம் சுக்கிலபட்சம்.

அமரிக்கை ஆயிரம் பொன் பெறும்.

அமாவாசை இருட்டிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி.

(கருக்கலிலே.)

அமாவாசை இருட்டு; சோற்றுப் பானையை உருட்டு.

அமாவசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம். 855

அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா?

(சும்மா அகப்படுமா?)

அமாவாசைப் பணியாரம் அன்றாடம் கிடைக்குமா?

அமாவாசைப் பருப்புச் சோறு சும்மா சும்மா கிடைக்குமா?

அமாவாசைப் பானை என்று நாய்க்குத் தெரியுமா?

அமிஞ்சி உண்டோ கும்பு நாயக்கரே. 860

(அமிஞ்சி-கூலி இல்லா வேலை.)