42
தமிழ்ப் பழமொழிகள்
அயிலாலே போழ்ப அயில்.
- (பழமொழி நானூறு.)
அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு.
அர்ச்சுன சந்நியாசி. 890
அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்க, அச்சான்யம்போல் திருமங்கல்யம் எதற்கு?
அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்கையில் அஞ்ஞானம்போல் தாலி என்னத்துக்கு?
அர்ச்சுனன்போல் அகமுடையானும் அபிமன்யுபோல் பிள்ளையும்
அர்ச்சுனனுக்குக் கண் அரக்கு மாளிகையில்.
அர்ச்சுனனுக்குப் பகை அரக்கு மாளிகை. 895
அரக்கன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன?
அரக்குக் கூடு கட்டினால் வீட்டுப் பெண் தாய் ஆவாள்.
அரக்கு முத்தி தண்ணீர்க்குப் போனாள்; புண் பிடித்தவன் பின்னாலே போனான்.
அரகர சிவசிவ மகாதேவா, ஆறேழு சுண்டலுக்கு லவாலவா.
அரகரன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன? 900
அரகரா என்கிறது பெரிதோ? ஆண்டி கிடக்கிறது பெரிதோ?
- (ஆண்டிக்கு இடுவது.)
அரகரா என்கிறவனுக்குத் தெரியுமா? அமுது படைக்கிறவனுக்குத் தெரியுமா?
அரகரா என்பது பாரமா? அமுது படைப்பது பாரமா?
அரங்கன் சொத்து அக்கரை ஏறாது.
அரங்கன் சொத்து அழகன் அங்கவடிக்குக் காணாது. 905
அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடுவேனோ?
- (தொண்டரடிப் பொடியாழ்வார் சொன்னதாகக் கதை.)
அரங்கு இன்றி வட்டாடலும் அறிவின்றிப் பேசுதலும் ஒன்று.
அரங்கூடு குரங்கே, மரத்தை விட்டு இறங்கே.
அரசங்கட்டையும் ஆபத்துக்கு உதவும்.
அரசமரத்துப் பிள்ளையார் போல அகமுடையான் இருக்க அச்சான்யம் போலத் தாலி எதற்கு? 910
அரச மரத்தைப் பிடித்த சனியன் ஆலமரத்தைப் பிடித்ததாம்.
அரச மரத்தைப் பிடித்த பிசாசு அடியில் இருந்த பிள்ளையாரையும் பிடித்ததாம்.
- (பிடித்த சனியன்.)
அரசன் அதிகாரம் அவன் நாட்டோடே.