தமிழ்ப் பழமொழிகள்
45
அரண்மனை காத்தவனுக்கும் அடுப்பங்கரை காத்தவனுக்கும் குறைவு இல்லை. 965
அரண்மனை காத்தவனும் ஆலயம் காத்தவனும் வீணாகப் போக மாட்டார்கள்.
அரண்மனை ரகசியம் அங்காடிப் பரசியம்.
அரண்மனை லங்கா தகனம்; அரசனுக்கோ சங்கீத கவனம்.
அரண்மனை வாசல் காத்தவனும் பறிமடை வாசல் காத்தவனும் பறிபோகிறது இல்லை.
- (பழுது போவது இல்லை.)
அரணை அலகு திறக்காது. 970
அரணை கடித்தால் உடனே மரணம்.
- (அப்போதே.)
அரத்தை அரம் கொண்டும் வயிரத்தை வயிரம் கொண்டும் அறுக்க வேண்டும்.
அரபிக் குதிரையானாலும் ஆள் ஏறி நடத்த வேண்டும்.
அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி மேல்.
- (நல்லது.)
அரமும் அரமும் கூடினால் கின்னரம். 975
- (தாக்கினால்.)
அரவணைச் சோறு வேண்டுமானால் அறைக்கீரைக்குப் பின்தான் கிடைக்கும்.
- (சீரங்கத்தில் தாயாருக்கு அமுது செய்விப்பார்.)
அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?
அரவத்தோடு ஆடாதே; ஆற்றில் இறங்காதே.
அரவின் வாய்த் தேரைபோல.
அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும். 980
- (வெற்றி வேற்கை.)
அரன் அருள் அல்லாது அணுவும் அசையாது.
- (இல்லாமல்.)
அரன் அருள் அற்றால் அனைவரும் அற்றார்.
அரன் அருள் உற்றால் அனைவரும் உற்றார்.
அராமி கோபால் தெய்வத்துக்குப் பாடுகோ பாதிரி.
அரி அரி என்றால் ராமா ராமா என்கிறான். 985 .