48
தமிழ்ப் பழமொழிகள்
அரிவாள் சூட்டைப் போலக் காயச்சல் மாற்றவோ?
அரிவாள் பிடி பிடித்தால் கொடுவாள் பிடியில் நிற்கட்டுமே.
அரிவாள் வெட்டுகிற மரம் ஆனைக்குப் பல்லுக் குச்சி.
அரிவாளுக்கு வெட்டினால் கத்திப் பிடிக்காவது உதவும்.
அரிவாளும் அசைய வேண்டும்; ஆண்டை குடியும் கெடவேண்டும். 1035
- (அசையும்; கெடும்.)
அரிவை மொழி கேட்டால் அறிஞனும் அவத்தன் ஆவான்.
அருக்காணி நாச்சியார் குரங்குப் பிள்ளையைப் பெற்றாளாம்.
அருக்காணி முத்து கரிக்கோலம் ஆனாள்.
அருக்காணி முருக்கப்பூப்போலச் சரக்குப் பிரியப் பண்ணுகிறது.
அருக்காமணி முருக்கம் பூ. 1040
அருக்கித் தேடிப் பெருக்கி அழிப்பதா?
- (அழி.)
அருகாகப் பழுத்தாலும் விளாமரத்தில் வெளவால் சேராது.
அருங்கொம்பில் தேன் இருக்கப் புறங்கையை நக்கினால் வருமா?
அருங்கோடை தும்பு அற்றுப் போகிறது.
- (அருங்கோடை போலும்.)
அருஞ்சுனை நீர் உண்டால் அப்பொழுதே ஜூரம். 1045
- (ரோகம்.)
அருட்செல்வம் ஆருக்கும் உண்டு; பொருட் செல்வம் ஆருக்கும் இல்லை.
அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- (ஆகாசமெல்லாம் பேய்.)
அருணாம்பரமே கருணாம்பரம்.
அருணோதயத்துக்கு அரிசி களைந்து வைத்தால் அஸ்தமிக்க வடிக்க மாட்டேனா?
அருத்தியைப் பிடுங்கித் துருத்தியிலே போட்டுத் துருத்தியைப் பிடுங்கி அருத்தியிலே போடுகிறது. 1050
அரும்பு ஏறினால் குறும்பு ஏறும்.
அரும்பு கோணினால் அதன் மணம் குன்றுமா?
- (நரம்பு கோணினால் நாம் அதற்கென் செய்வோம்.)
அருமந்த பெண்ணுக்கு அடியெல்லாம் ஓட்டை.