தமிழ்ப் பழமொழிகள்
51
அரைச்சொல் வித்தை கொண்டு அம்பலம் ஏறலாமா?
அரைஞாண் கயிறும் தாய்ச்சீலையும் ஆய்விடுகிறவள் பெண்சாதி.
- (ஆய் விடுகிறவளும்.)
அரைத்ததும் மீந்தது அம்மி; சிரைத்ததும் மீந்தது குடுமி.
அரைத்ததையே அரைப்பது போல. 1100
அரைத்தவளுக்கு ஆட்டுக்கல்; சுட்டவளுக்குத் தோகைக் கல்.
அரைத்தாலும் சந்தனம் அதன்மணம் மாறாது.
அரைத் துட்டிலே கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை.
அரைத் துட்டுக்குப் பீத் தின்றவன்,
அரைத்துணியை அவிழ்த்து மேல்கட்டுக் கட்டியது போல. 1105
அரைத்து மீந்தது அம்மி; சிரைத்து மீந்தது குடுமி.
- (மிஞ்சினது.)
அரைப்படி அரிசியில் அன்னதானம்; அதிலே கொஞ்சம் மேளதாளம்.
அரைப்படி அரிசியில் அன்னதானம்; விடியும் மட்டும் மேளதாளம்.
- (விடிய விடிய)
அரைப் படிப்பைக் கொண்டு அம்பலம் ஏறலாமா?
அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா? 1110
அரைப் பணத்திலே கல்யாணம், அதிலேகொஞ்சம் வாணவேடிக்கை.
அரைப் பணத்துக்கு வாய் அதிகம்; ஐந்தாறு அரிசிக்குக் கொதி அதிகம்.
அரைப் பணத்துக்கு மருத்துவம் பார்க்கப் போய் அஞ்சு பணத்து நெளி உள்ளே போய்விட்டது.
அரைப் பணம கொடுக்கப் பால் மாறி அம்பது பணம் கொடுத்து அரி சேவை செய்த கதை.
அரைப் பணம் கொடுககப் பால்மாறி ஐம்பது பணம் கொடுத்துச் சேவை செய்த கதை. 1115
அரைப் பணம் கொடுத்து அழச்சொல்லி, ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்னானாம்.
அரைப் பணம் கொடுத்து ஆடச் சொன்னால், ஒருபணம் கொடுத்து ஓயச் சொல்ல வேணும்.
அரைப் பணம் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா?
அரை பறக்கத் தலை பறக்கச் சீராட்டல்.
அரை மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்தான் செட்டி. 1120
அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகா.
அரையும் குறையும்.