தமிழ்ப் பழமொழிகள்
57
அவன் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.
அவன் சாதி அறிந்த புத்தி, குலம் அறிந்த ஆசாரம். 1255
அவன் சாதிக்கு எந்தப் புத்தியோ குலத்துக்கு எந்த ஆசாரமோ அதுதான் வரும்.
அவன் சாயம் வெளுத்துப் போய்விட்டது.
அவன் சிறகு ஒடிந்த பறவை.
- (இல்லாத பறவை.)
அவன் செய்த வினை அவனைச் சாரும்.
அவன் சொன்னதே சட்டம்; இட்டதே பிச்சை. 1260
அவன் சோற்றுக்குத் தாளம் போடுகிறான்.
அவன் சோற்றை மறந்துவிட்டான்.
அவன் தம்பி அங்கதன்.
- (மகன்.)
அவன் தம்பி நான்தான்; எனக்கு ஒன்றும் வராது.
அவன் தலையில் ஓட்டைக் கவிழ்ப்பான். 1265
அவன் தவிடு தின்று போவான்.
அவன் தன்னாலேதான் கெட்டால், அண்ணாவி என்ன செய்வான்?
அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.
அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.
அவன் நடைக்குப் பத்துப்பேர் வருவார்கள்; கைவீச்சுக்குப் பத்துப் பேர் வருவார்கள். 1270
அவன் நா அசைந்தால் நாடு அசையும்.
அவன் நிரம்ப வைதிகமாய்ப் பேசுகிறான்.
அவன் நின்ற இடம் ஒரு சாண் வெந்து இருபது சாண் நீறாகும்.
அவன் பசியாமல் கஞ்சி குடிக்கிறான்.
அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால். 1275
அவன் பின்புறத்தைத் தாங்குகிறான்.
அவன் பூராய மாயம் பேசுகிறான்.
அவன் பேச்சு விளக்கெண்ணெய்ச் சமாசாரம்.
அவன் பேச்சைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேணும்.
அவன் பேசுகிறது எல்லாம் தில்லுமுல்லு, திருவாதிரை. 1280
அவன் போட்டதே சட்டம்; இட்டதே பிச்சை.
அவன் மனசே அவனுக்குச் சாட்சி.
அவன் மிதித்த இடத்தில் புல்லும் முளையாது.
அவன் மிதித்க இடம் பற்றி எரிகிறது.
அவன் மூத்திரம் விளக்காய் எரிகிறது. 1285
அவன் மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன்.
- (மெத்தப் பேச்சுக்காரன்.)