தமிழ்ப் பழமொழிகள்
59
அவிசாரிக்கு ஆணை இல்லை; திருடிக்குத் தெய்வம் இல்லை.
அவிசாரிக்கும் ஆற்றில் விழுகிறவளுக்கும் காவல் போட முடியுமா?
அவிசாரிக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குக் கொதி பெரிது. 1320
அவிசாரி கையில் சாப்பிடாதவனும் அரிசிப் புழுத் தின்னாதவனும் இல்லை.
அவிசாரி பிள்ளை கோத்திரத்துக்குப் பிள்ளை.
அவிசாரி பிள்ளை சபைக்கு உறுதி.
அவிசாரி போக ஆசையாய் இருக்குது; அடிப்பானென்று பயமாய் இருக்குது.
அவிசாரி போனாலும் முகராசி வேணும்; அங்காடி போனாலும் கைராசி வேணும். 1325
அவிசாரியிலே வந்தது பெரு வாரியிலே போகிறது.
அவிசாரி வாயாடுகிறாற் போலே.
அவிட்டத்தில் பிறந்த தங்கச்சியை அந்நியத்தில் கொடுக்கக் கூடாது.
அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையிலும் பொன்.
அவிட்டத்துப் பெண் தொட்டதெல்லாம் பொன். 1330
அவித்த பயறு முளைக்குமா?
அவிர்ப் பாகத்தை நாய் மோந்த மாதிரி.
அவிவேகி உறவிலும் விவேகி பகையே நன்று.
- (நலம்.)
அவிழ்த்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம்.
- (பி. ம்.) நாய்.
அவிழ்த்து விட்ட காளை போல. 1335
அவிழ்த்து விட்டதாம் கழுதை; எடுத்து விட்டதாம் ஓட்டம்.
அவிழ்த்து விட்டால் பேரளம் போவான்.
அவிழ்தம் என்ன செய்யும்? அஞ்சு குணம் செய்யும்; பொருள் என்ன செய்யும்? பூவை வசம் செய்யும்.
- (பி. ம்.) பணம்.
அவுங்க என்றான், இவுங்க என்றான்; அடிமடியிலே கையைப் போட்டான்.
அவையிலும் ஒருவன், சவையிலும் ஒருவன். 1340
அழ அழச் சொல்வார் தமர்; சிரிக்கச் சிரிக்கச் சொல்வார் பிறர்.
- (பி. ம்.) தம் மனிதர்.
அழகர் கோயில் மாடு தலை ஆட்டினது போல.
அழகன் நடைக்கு அஞ்சான்; செல்வன் சொல்லுக்கு அஞ்சான்.
அழகால் கெட்டாள் சீதை, வாயால் கெட்டாள் திரெளபதி.