தமிழ்ப் பழமொழிகள்
61
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்து என்ன? கழுதை மேய்ந்து என்ன?
- (பி-ம்) அழிந்த நந்தவனத்தில்.
அழிந்தவன் ஆரோடு போனால் என்ன? 1375
அழிய உழுது அடர விதை.
அழியாச் செல்வம் விளைவே ஆகும்.
அழியாத செல்வத்துக்கு அசுவம் வாங்கிக் கட்டு.
அழி வழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
அழிவுக்கு முன்னால் அகந்தை. 1380
அழுக்குக்குள் இருக்கும் மாணிக்கம்.
அழுக்குச் சீலைக்குள் மாணிக்கம்.
அழுக்குத் துணியில் சாயம் தோய்ப்பது போல.
அழுக்கை அழுக்குக் கொல்லும்; இழுக்கை இழுக்குக் கொல்லும்.
அழுக்கைத் துடைத்து மடியிலே வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது. 1385
- (பி-ம்.) இழுக்குக் குணம்.
அழுகலுக்கு ஒரு புழுத்தல்.
அழு கள்ளன், தொழு கள்ளன், ஆசாரக் கள்ளன்.
அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக் கூடாது.
அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.
- (பி-ம்.) கொடுத்த கதை போல.
அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம். 1390
- (பி-ம்.) காட்டுகிறது போல
அழுகிற பிள்ளையும் வாயை மூடிக் கொள்ளும்,
அழுகிற வீட்டில் இருந்தாலும் ஒழுகுகிற வீட்டில் இருக்கக் கூடாது.
அழுகிற வீட்டுக்குப் போனாலும் திருட்டுக் கை சும்மா இராது.
அழுகிற வேளை பார்த்து அக்குளில் பாய்ச்சுகிறான்.
அழுகின பழம் ஐயருக்கு. 1395
அழுகை ஆங்காரத்தின் மேலும், சிரிப்புக் கெலிப்பின் மேலுந்தான்.
அழுகைத் தூற்றல் அவ்வளவும் பூச்சி.
அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடே.
அழுகையும் சிணுங்கலும் அம்மான் வீட்டில்; சிரிப்பும் களிப்பும் சிற்றப்பன் வீட்டில்.
அழுத்தந் திருத்தமாய் உழுத்தம் பருப்பு என்றான். 1400