தமிழ்ப் பழமொழிகள்
69
அறுபத் தெட்டுக்கு ஓர் அம்பலம்.
அறுபதாம் கலக்கம்.
- (அறுபது-அறுபது பிராயம்.)
அறுபது அடிக் கம்பம் ஏறினாலும் கீழே வந்துதான் யாசகம் வாங்கவேண்டும்.
- (பி-ம்.) அடியில் இறங்கித்தான் பிச்சை எடுக்க வேண்டும்.
அறுபதுக்கு அப்புறம் பொறுபொறுப்பு.
அறுபதுக்கு அறுபது சென்றால் வீட்டுக்கு நாய் வேண்டாம். 1585
- (யாழ்ப்பாண வழக்கு.)
அறுபதுக்கு மேல் அடித்ததாம் யோகம்.
அறுபதுக்கு மேல் அறிவுக் கலக்கம்.
- (பி-ம்.) கிறுகிறுப்பு.
அறுபது நாழிகையும் பாடுபட்டும் அரை வயிற்றுக்கு அன்னம் இல்லை.
அறுபது நாளைக்கு எழுபது கதை.
- (பி-ம்.) இருபது கதை.
அறுபது வயது சென்றால் அவன் வீட்டுக்கு நாய் வேண்டாம். 1590
அறுவடைக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண் சாதி.
- (பி-ம்.) நான்கு.
அறுவாய்க்கு வாய்பெரிது; அரிசிக்குக் கொதி பெரிது.
அறைக் கீரைப் புழுத் தின்னாதவனும் அவிசாரி கையில் சோறு உண்ணாதவனும் இல்லை.
- (பி-ம்.) விலைமாது கையில்.
அறைக்குள் நடந்தது அம்பலத்தில் வந்து விட்டது.
- (பிள்ளை.)
அறை காத்தான் பெண்டு இழந்தான்; அங்கேயும் ஒரு கை தூக்கி விட்டான். 1595
அறை காத்தான் பெண்டு இழந்தான்; ஆறு காதம் சுமந்தும் செத்தான்.
அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?
அறையில் இருந்த பேர்களை அம்பலம் ஏற்றுகிற புரட்டன்.
- (பி-ம்.) மிரட்டன்.