70
தமிழ்ப் பழமொழிகள்
அறையில் சொன்னது அம்பலத்துக்கு வரும்.
அறையில் நடப்பது அம்பலத்துக்கு வரலாமா? 1600
அறைவீட்டுச் செய்தி அம்பலத்தில் வரும்.
அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம்.
அன்பின் பணியே இன்ப வாழ்வு.
அன்பு அற்ற மாமிக்குக் கும்பிடும் குற்றமே.
அன்பு அற்றார் பாதை பற்றிப் போகாதே. 1605
அன்பு இருக்கும் இடம் அரண்மனை.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்பு இல்லாக் கூழும் இன்பம் இல்லா உடன்பிறப்பும்.
அன்பு இல்லாத தாயும் அறிவு இல்லாத புத்திரனும் இன்பம் இல்லாத உடன்பிறப்பும் எதற்குப் பிரயோசனம்?
அன்பு இல்லாதவர்க்கு ஆதிக்கம் இல்லை. 1610
அன்பு இலாதார் பின்பு செல்லேல்.
- (குறள், 1255) காளிங்கன் உரை.
அன்பு இலாள் இட்ட அமுது ஆகாது.
அன்பு உடையானைப் பறிகொடுத்து அலையறச்சே அசல் வீட்டுக் காரன் வந்து அழைத்தானாம்.
அன்பு உள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான்.
அன்பு உள்ள குணம் அலை இல்லா நதி. 1615
அன்புக்குத் திறக்காத பூட்டே இல்லை.
அன்புடனே ஆண்டவனை வணங்கு.
அன்பே சிவம்.
- (திருமந்திரம்.)
அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம்.
- (பி-ம்.) வெகுதானம்.
அன்பே மூவுலகுக்கும் ராஜா. 1620
அன்றாடம் காய்ச்சி.
அன்றாடம் சோற்றுக்கு அல்லாடி நிற்கிறது.
அன்று அடிக்கிற காற்றுக்குப் படல் கட்டிச் சாத்தலாம்.
அன்று அற ஆயிரம் சொன்னாலும் நின்று அற ஒரு காசு பெரிது.
அன்று இல்லை, இன்று இல்லை; அழுகற் பலாக்காய் கல்யாண வாசலிலே கலந்துண்ண வந்தாயே. 1625
அன்று இறுக்கலாம்; நின்று இறுக்கலாகாது.
அன்று எழுதினவன் அழித்து எழுத மாட்டான்.