தமிழ்ப் பழமொழிகள்
73
அன்னமயம் இன்றிப் பின்னை மயம் இல்லை.
அன்னமயம் பிராண மயம்.
அன்னமும் தண்ணீரும் கேட்காமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்கு மேலே பத்துப் பங்காய் வளர்ப்பேன். 1675
அன்னமோ ராமசந்திரா.
அன்ன வலையில் அரன் வந்து சிக்குவான்.
அன்னிய சம்பத்தே அல்லாமல் அதிக சம்பத்து இல்லை என்றான்.
அன்னிய சம்பந்தமே அல்லாமல் அத்தை சம்பந்தம் இல்லை என்கிறான்.
அன்னிய மாதர் அவதிக்கு உதவார், 1680
- (பி-ம்.) உதவுவாரா?
அன்னைக்கு உதவாதான் ஆருக்கும் உதவான்.
- (பி-ம்.) ஆருக்கும் ஆகான்.
அன்னைக்குப் பின் பெற்ற அப்பன் சிற்றப்பன்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
- (கொன்றை வேந்தன்.)
அனந்தங் காட்டிலே என்ன இருக்கப் போகிறது?
அனந்தத்துக்கு ஒன்றாக உறையிட்டாலும் அளவிடப் போகாது. 1685
அனல், குளிர், வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்துக்குள் அடங்கும்.
அனலில் இட்ட மெழுகுபோல.
அனற்றை இல்லா ஊரிலே வண்ணார் இருந்து கெட்டார்கள்.
அனுபோகக்காரனுக்கு ஆளாய்க் காக்கிறான்.
அனுபோகம் தெளிகிற காலத்தில் ஒளஷதம் பலிக்கும். 1690
- (பி-ம்.) அனுபோகம் மிகும்போது.
அனுமந்தராயரே, அனுமந்தராயரே என்றானாம்; பேர் எப்படித் தெரிந்தது என்றானாம்; உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியாதா என்றானாம்.
அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருநாளாம்.
அனுமார் இலங்கையைத் தாண்டினாராம்; ஆனை எதைத் தாண்டும்?
அனுமார் தம்பி அங்கதன் போலே.
அனுமார் வால் நீண்டது போல. 1695
அஜகஜாந்தரம்.
அஜாகளஸ்தம் போல்.
அஷ்ட சஹஸ்ரத்துக்குப் பிரஷ்ட தோஷம் இல்லை
அஷ்ட சஹஸ்ரப் பிலுக்கு.