தமிழ்ப் பழமொழிகள்
77
ஆகாத்தியக்காரனுக்குப் பிரம்மகத்திக்காரன் சாட்சி. 1760
ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு; அதிலும் கெட்டது குருக்களுக்கு,
ஆகாத நாளில் பிள்ளை பிறந்தால் அண்டை விட்டுக்காரனை என்ன செய்யும்?
ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்.
ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக் கொள்.
ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்க வேண்டும். 1765
ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அடுத்த வீட்டுக்காரனை என்ன செய்யும்?
ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யும்?
ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அப்பனையும் ஆத்தாளையும் கொல்லுமேயொழிய, பஞ்சாங்கம் சொன்ன பார்ப்பானை என்ன செய்யும்?
ஆகாதே உண்டது நீலம் பிறிது.
- (பழமொழி நானூறு.)
ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்குமா? 1770
ஆகாயத்தில் கூட அரைக் குழிக்கு அவகாசம் இல்லை.
ஆகாயத்தில் போகிற சனியனை ஏணி வைத்து இறக்கின மாதிரி.
ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறது போல.
ஆகாயததைப் படல் கொண்டு மறைப்பது போல.
ஆகாயத்தை வில்லாக வளைப்பான்; மனலைக் கயிறாகத் திரிப்பான். 1775
ஆகாயப் புரட்டனுக்கு அந்தரப் புரட்டன் சாட்சி சொன்னானாம்.
ஆகாயம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா?
ஆகாயம் போட்டது; பூமி ஏந்திற்று.
ஆகாயம் மணல் கொழித்தால் அடுத்தாற் போல் மழை.
- (பி-ம்.) மணல் கொண்டிருந்தால்.
ஆகாயம் விழுந்து விட்டது போல. 1780
ஆகாயம் மட்டும் அளக்கும் இருப்புத் தூணைச் செல் அரிக்குமா?
ஆகிற காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்.
ஆகிற காலத்தில் அவிழ்தம் பலிக்கும்.
ஆகிற காலத்திலெல்லாம் அவிசாரி ஆடி, சாகிற காலத்தில் சங்கரா என்றாளாம்.