78
தமிழ்ப் பழமொழிகள்
ஆகிறது அரைக் காசில் ஆகும்; ஆகாதது ஆயிரம் பொன்னாலும் ஆகாது. 1785
ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்; ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் ஆகான்.
- (பி-ம்.) விடியாது.
ஆகும் காய் பிஞ்சிலே தெரியும்.
ஆகும் காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்.
ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
ஆகும் காலம் எல்லாம் அவிசாரி போய் விட்டுச் சாகும் காலத்தில் சங்கரா சங்கரா என்றாளாம். 1790
- (பி-ம்.) அங்கும் இங்கும் ஆடி.
ஆகும் காலம் வந்தால் தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்,
ஆங்காரத்தாலே அழிந்தவர் அனந்தம் பேர்.
ஆங்காரிகளுக்கு அதிகாரி,
ஆங்காரியை அடக்குபவன் அதிகாரி.
ஆச்சாபுரம் காட்டிலே ஐம்பது புலி குத்தினவன் பறைச்சேரி நாயோடே பங்கம் அழிகிறான். 1795
ஆச்சா விதைத்தால் ஆமணக்கு விளையுமா?
ஆச்சானுக்குப் பீச்சான் ; மதனிக்கு உடன் பிறந்தான்,
ஆச்சானுக்குப் பீச்சான்; மதனிக்கு உடன் பிறந்தான்; நெல்லுக் குத்துகிறவளுக்கு நேர் உடன் பிறந்தான்.
- (பி-ம்.) நெல்லுக்குத்துக்காரிக்கு.
ஆச்சி, ஆச்சி, மெத்தப் படித்துப் பேசாதே.
ஆச்சி திரளவும் ஐயா உருளவும் சரியாக இருக்கும். 1800
ஆச்சி நூற்கிற நூல் ஐயர் பூணூலுக்குச் சரி.
ஆச்சி நூற்பது ஐயர் பூணூலுக்கும் காணாது.
ஆசந்திரார்க்கம்.
- (சந்திரர் சூரியர் உள்ளவரையில்.)
ஆசரித்த தெய்வமெல்லாம அடியோடே மாண்டது என்கிறான்.
- (பி-ம்.) ஆசிரயித்த.
ஆசன கீதம் ஜீவன நாசம். 1805
ஆசாபாசம் அந்தத்தில் மோசம்.
ஆசாரக் கள்ளன்.
- (தண்டலையார் சதகம்.)
ஆசாரத்துக்கு ஆசாரம்; கைத்துக்குச் சுகம்.