பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழ்ப் பழமொழிகள்

79


ஆசாரப் பார்ப்பான் ...............க்குப் போனானாம்; பறையன் கோசம் தலையில் அடிபட்டதாம்.

ஆசாரப் பூசைப்பெட்டி; அதன்மேல் கவிச்சுச் சட்டி. 1810

(பா-ம்.) தோசைபெட்டி.

ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்து போனேனே!

ஆசாரி குத்து.

ஆசாரி செத்தான் என்று அகத்திக் கழி கட்டி அழுகிறாற்போல்.

(செத்தான்-செதுக்கமாட்டான்.)

ஆசாரி பெண்ணுக்கு அழகா பார்க்கிறது?

ஆசாரியருக்கு ..............தலை அம்பட் ........................................... 1815

(தென் கலை வைணவ விதவைகள்.)

ஆசாரி வீட்டுக்கு அடுப்பு இரண்டு.

ஆசானுக்கும் அடைவு தப்பும்; ஆனைக்கும் அடி சறுக்கும்.

ஆசிரியர் சொல் அம்பலச் சொல்,

ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை.

ஆசை அண்டாதானால் அழுகையும் ஆண்டாது. 1820

ஆசை அண்டினால் அழுகையும் அண்டும்.

ஆசை அதிகம் உள்ளவனுக்கு ரோசம் இருக்குமா?

ஆசை அவள் மேலே; ஆதரவு பாய் மேலே.

ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்; தொண்ணுாறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி.

ஆசை இருக்கிறது. ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கிறது கழுதை மேய்க்க. 1825

ஆசை இருக்கிறது தாசில் பண்ண; அதிருஷ்டம் இருக்கிறது மண் சுமக்க.

(பா-ம்.) ஆடு மேய்க்க, கழுதை மேய்க்க.

ஆசை உண்டானால் பூசை உண்டு.

ஆசை உள்ள இடத்தில் பூசை நடக்கும்.

ஆசை உள்ள இடத்தில் பூசையும் அன்பு உள்ள இடத்தில் தென்பும்.

ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு. 1830

ஆசை உறவு ஆகுமா? ஆதரவு சோறு ஆகுமா?

ஆசை எல்லாம் தீர அடித்தான் முறத்தாலே.

ஆசைக்காரனுக்கு ரோசம் இல்லை.