பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தமிழ்ப் பழமொழிகள்


ஆசைக்கு அளவு இல்லை.

(பா-ம்.) ஓர் அளவில்லை, தாயுமானவர் பாடல்.

ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை. 1835

ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும்.

ஆசைக்கு ரோசம் இல்லை.

ஆசை கடுக்குது; மானம் தடுக்குது.

ஆசை காட்டி மோசம் செய்கிறதா?

ஆசை கொண்ட பேருக்கு ரோசம் இல்லை. 1840

ஆசை தீர்ந்தால் அல்லல் தீரும்.

ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?

(ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாங்கொலோ, கம்பராமாயணம்.)

ஆசைப்பட்டது கிடைக்கவில்லையென்றால் ஆண்பிள்ளை அடுத்த கண்ணும் பாரான்.

ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று.

(பி-ம்.) ஆசைப்பட்டது.

ஆசைப்பட்டு மோசம் போகாதே. 1845

ஆசைப்படுவது அவ்வளவும் துன்பம்.

ஆசை பெரிதோ? ஆனை பெரிதோ?

(பா-ம்.) மலை பெரிதோ?

ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.

ஆசை மருமகன் தலைபோனாலும் ஆதிகாலத்து உரல் போகக் கூடாது.

ஆசையினால் அல்லவோ பெண்களுக்கு மீசை முளைப்ப தில்லை? 1850

ஆசையும் நாசமும் அடுத்து வரும்.

ஆசை ரோசம் அறியாது.

ஆசை வெட்கம் அறியுமா?

ஆசை வைத்தால் நாசந்தான்.

ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக் கொடுக்கும். 1855

(பா-ம்.) பிடித்துக் கொடுக்கும்.

ஆட்காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனோ? அவன் கால் அடிபிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனோ?

ஆட்சி புரிய அரண்மனை வாசலிலே பாரக் கழுக்காணி பண்ணிப் புதைத்திருக்கிறது.