பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தமிழ்ப் பழமொழிகள்


ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக்கொண்டு ஊர் எங்கும் தேடினது போல.

(பா-ம்.) காடு எங்கும்.

ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது.

ஆட்டுக்குத் தோற்குமா கிழப்புலி? 1885

(பா-ம்.) தோற்ற கிழப்புலியா?

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; அறிவு இல்லாதவனுக்கு மூன்று கொம்பு.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; இந்த மதிகெட்ட மாட்டுக்கு மூன்று கொம்பு.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; ஐயங்காருக்கு மூன்று கொம்பு.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; ஐயம் பிடாரிக்கு மூன்று கொம்பு.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் முறையா? காட்டுக்கும் பாட்டுக்கும் வரையா? 1890

ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கிறது: (+ மாட்டுக்கு வால் மட்டந்தட்டி வைத்திருக்கிறது.)

ஆட்டுக்கு வேகம் பள்ளத்திலே; ஆனைக்கு வேகம் மேட்டிலே.

(பா-ம்.) அலைகிறது போல.

ஆட்டுத்தலைக்கு ஓச்சன் பறக்கிறது போல.

ஆட்டுத் தலைக்கு வண்ணான் பறக்கிறதுபோல.

ஆட்டு மந்தையிலே கோனாய் புகுந்தாற் போல. 1895

ஆட்டுமந்தையைக் காக்கும் நாய் வீட்டுப் புழுக்கையைக் கூடத்தான் காக்க வேணும்.

ஆட்டு வாணிகர் ஆலிங்கனத்தைவிடக் கூட்டு வாணிகர் குட்டு நல்லது.

(கூட்டு-வாசனைத் திரவியம்.)

ஆட்டுவித்துப் பம்பை கொட்டுகிறான்.

ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளையே கடித்ததாம். 1900

(பா-ம்.) மனுஷனையே.

ஆட்டைக் கழுதையாக்கிய அரிட்டாப் பாடி.

(அரிட்டாப்பாடி-மேலூருக்கும் அழகர் கோவிலுக்கும் இடையே உள்ள சிற்றுார்.)

ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்க வேண்டும்.

(பா-ம்.) பிடிக்கப் பார்க்கிறான்.