பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

85


ஆடிக் காற்று நாடு நடுக்கும்.

ஆடிக் கீழ்காற்றும் ஐப்பசி மேல்காற்றும் அடித்தால் அவ்வாண்டும் இல்லை, மறு ஆண்டும் இல்லை மழை.

(பா-ம்.) காற்றும் ஆகாத நாளைக்கு.

ஆடிக்கு அடைபட்டவளே, அமாவாசைக்கு வெளிப்பட்டவளே!

ஆடிக்கு அழைக்காத மாப்பிள்ளையைத் தேடிச் செருப்பால் அடி.

ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப் பிடித்து அடி. 1955

ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடி மயிரைப் பிடித்துச் செருப்பால் அடி.

ஆடிக்கு ஒரு தடவை, ஆவணிக்கு ஒரு தடவை.

ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்.

ஆடிக்கு ஒரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும்.

ஆடிக்குத் தை ஆறு மாசம். 1960

ஆடி கழிந்த எட்டாம் நாள் கோழி அடித்துக் கும்பிட்டானாம்.

ஆடி கழிந்த ஐந்தாம் நாள் கோழி அடித்துக் கும்பிட வந்தான்.

ஆடிச்சீர் தேடி வரும்.

ஆடிச் செவ்வாய் தேடிக் குளி; அரைத்த மஞ்சளைத் தேய்த்துக் குளி.

ஆடிச் செவ்வாய் நாடிப் பிடித்தால் தேடிய கணவன் ஓடியே வருவான். 1965

ஆடித் தவித்த குரங்கு மத்தளத்தில் ஏறி இருப்பது போல.

ஆடித் தென்றல் நாடு நடுங்கும்.

ஆடி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்தது.

ஆடிப் பட்டத்து மழை தேடிப் போனாலும் கிடைக்காது.

ஆடிப் பட்டம் அஞ்சு விதை; அக்கிரகாரம் நிறைய நெல். 1970

ஆடிப்பட்டம் தேடி விதை.

ஆடிப் பண்டிகை தேடி அழை.

ஆடிப் பருத்தியைத் தேடி விதை.

ஆடி பதினைந்தில் ஐம்மூன்று நாழிகையில் ஓடும் கதிரோன ஒளிகுறைந்தால் நாடு செழிக்கும்; நல்ல மழை பெய்யும்.

ஆடிப் பனங்காய் தேடிப் பொறுக்கு. 1975

ஆடிப் பிள்ளை தேடிப் புதை.

(பிள்ளை-தென்னம்பிள்ளை.)