தமிழ்ப் பழமொழிகள்
7
அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்.
அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
அக்கிரகாரத்து நாய் அபிமானத்துக்குச் செத்தது. 40
அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா?
- (பாம்.) நாய்க்குக் கூட அகவிலை தெரியும்.
அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல,
- (பா-ம்.) அழுமா?
அக்கிரமக்காரன் முகத்தில் விழியாதே.
அக்கினிக்கும் சாகாத தங்கத்தைப் போல.
அக்கினி சாட்சி, அருந்ததி சாட்சி. 45
அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான்.
- (பா-ம்.) பகவானுக்கு, கருத்து: கறுப்பாய் இருக்கிறான்.
அக்கினிப் பந்தலிலே வெண்ணெய்ப் பதுமை ஆடுமா?
- (பா.ம்.) வெண்ணெய்ப் பொம்மை,
அக்கினி மலையிலே கற்பூர பாணம் விட்டது போல்.
- (பா-ம்.) பிரயோகித்தது போல்.
அக்கினியால் சுட்ட புண் ஆறிப் போகும்.
அக்கினியால் சுட்ட புண் விஷம் கக்குமா? 50
- (பா-ம்.) விஷம் இருக்காது.
அக்கினியைக் குளிப்பாட்டி ஆனைமேல் வைத்தாற் போல,
- (கருத்து: எல்லாம் கறுப்பு.)
அக்கினியைக் குளிப்பாட்டினாற் போல.
அக்கினியைத் தின்று சீரணிக்கிற பிள்ளை, அல்லித் தண்டைத் தின்றது அதிசயமா?
- (பா-ம்.) கக்குகிற பிள்ளை.
அக்குணிப் பிள்ளைக்குத் துக்குணிப் பிச்சை.
அக்குத் தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன வந்தது? 55
- (அக்குத் தொக்கு-சம்பந்தம்.)
அக்குத் தொக்கு இல்லாதவன் ஆண்மையும், வெட்கம் சிக்கு இல்லாதவன் ரோஷமும் மிக்குத் துக்கப்படாதவன் வாழ்வும் நாய் கக்கி நக்கித் தின்றது ஒக்கும்,
அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கிறான்.
அகங்காரத்தால் அழிந்தான் துரியோதனன்,