பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தமிழ்ப் பழமொழிகள்


ஆடையைத் தின்றால் வெண்ணெய் இல்லை.

(பா-ம்.) உண்டா?

ஆடை வாய்க்கவும் ஆபரணம் வாய்க்கவும் அதிர்ஷ்டம் வேணும்.

ஆடை வாய்ப்பதும் அகமுடையான் வாய்ப்பதும் அவரவர் அதிர்ஷ்டம்.

ஆண் அவலம், பெண் அவலம், ஆக்கி வைத்த சோறும் அவலம். 2085

ஆண் அழகனும் சோறும் அடைவாய் இருந்தால் வீடெல்லாம் பிள்ளை விட்டெறிந்து பேசும்.

ஆண் ஆயிரம் ஒத்தாலும் பெண் நாலு ஒவ்வாது.

ஆண் இணலிலே நின்று போ; பெண் இணலிலே இருந்து போ.

(யாழ்ப்பாண வழக்கு. இணல் - நிழல்.)

ஆண் இன்றிப் பெண் இல்லை; பெண் இன்றி ஆண் இல்லை.

ஆண் உறவும் உறவல்ல; வேலி நிழலும் நிழலல்ல. 2090

ஆண் கேடு அரசு கேடு உண்டா?

(பா-ம்.) கேடும் இல்லை.

ஆண் சிங்கத்தை ஆனை அடுக்குமா?

ஆண்ட பொருளை அறியாதார் செய் தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.

ஆண்டவர் தரிசனம் அன்பர் விமோசனம்.

ஆண்டவன் ஒருவன் இருக்கிறான். 2095

ஆண்டவன் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை போடலாம்.

ஆண்டவன் விட்ட வழி.

ஆண்டார் அன்னத்தை அதிரப் பிடிக்கவும் போகாது; செட்டியார் எட்டிக் கன்னத்தில் அடிக்கவும் போகாது.

ஆண்டார் இருக்கும் வரையில் ஆட்டும் கூத்தும்.

ஆண்டாருக்குக் கொடுக்கிறாயோ? சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ? 2100

ஆண்டாருக்கும் பறப்பு; கோயிலுக்கும் சிறப்பு.

ஆண்டாரைப் பூதம் அஞ்சும்; மாண்டால் ஒழியப் போகாது.

ஆண்டால் அம்மியும் தேயும்.

ஆண்டி அடித்தானாம்; கந்தை பறந்ததாம்.

ஆண்டி அண்ணாமலை, பாப்பாரப் பஞ்சநதம். 2105

(பஞ்சநதம்-திருவையாறு.)