பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தமிழ்ப் பழமொழிகள்


ஆதரவு அற்ற வார்த்தையும் ஆணி கடவாத கை மரமும் பலன் செய்யாது. 2205

ஆதரவும் தேவும் ஐந்து வருஷத்திலே பலன் ஈயும்.

ஆதவன் உதிப்பதே கிழக்கு; அக்கம நாயக்கர் சொல்வதே வழக்கு; அதைக் கேட்டு நடத்தல் மினுக்கு; எதிர்த்துப் பேசினால் தொழுக்கு.

ஆதவன் உதிப்பதே கிழக்கு; கணக்கன் எழுதுவதே கணக்கு.

ஆதனக் கோட்டைக்கும் செவ்வாய்க் கிழமையாம்.

ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா? 2210

ஆதாயம் இல்லாத செட்டியார் ஆற்றோடே போவாரோ?

(பா-ம்.) செட்டி ஆற்றோடே போகிறானாம்.

ஆதாயம் உள்ளவரை ஆற்றைக் கட்டி இறைத்து விட்டுப் போகிறான்.

ஆதாயமே செலவு; அறை இருப்பதே நிலுவை.

ஆதி அந்தம் இல்லா அருமைப் பொருளே கர்த்தன்.

ஆதி கருவூர், அடுத்தது. வெஞ்சமாக் கூடலூர். 2215

ஆதி கருவூர், அழும்பப் பயல் வேலூர்.

ஆதித்தன் தெற்கு வடக்கு ஆனாலும் சாதித்தொழில் ஒருவரையும் விடாது.

(பா-ம்.) சனித்தொழில்.

ஆதி முற்றினால் வியாதி.

ஆதீனக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?

ஆந்தை சிறிது; கீச்சுப் பெரிது. 2220

ஆந்தை பஞ்சையாய் இருந்தாலும் சகுனத்தில் பஞ்சை இல்லை.

ஆந்தை விழிக்கிறது போல விழிக்கிறான்.

ஆந்தை விழி விழித்தால் அருண்டு போவாரோ?

ஆப்பக்காரியிடம் மாவு விலைக்கு வாங்கின மாதிரி.

ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்தது போல. 2225

ஆபத்தில் அறியலாம் அருமைச் சிநேகிதனை.

(பா-ம்.) நண்பனை.

ஆபத்தில் காத்தவன் ஆட்சியை அடைவான்.

ஆபத்தில் காத்தவன் ஆண்டவன் ஆவான்.