பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தமிழ்ப் பழமொழிகள்


ஒப்புக்கு மாங்கொட்டை, ஊருக்குச் சப்பாணி.

ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். 5900


ஒயிலாய்ப் பேசுகிறாள்; ஆனால் கனம் அறிந்த கப்பறையும் அல்ல; கண்டறிந்த #நாயும் அல்ல.

ஒரு அச்சிலே உருக்கி வார்த்தாற் போல.

ஒரு அடி அடித்தாலும் பட்டுக் கொள்ளலாம்; ஒரு சொல் மட்டும் கேட்க முடியாது.

ஒரு அப்பம் தின்னாலும் நெய்யப்பம் தின்ன வேணும்.

ஒரு இழவு என்றாள் உள்ளபடி ஆகும். 5905

(ஆகும்.)


ஒரு உறையிலே இரண்டு கத்தியா?

ஒரு ஊர் நட்பு, ஒரு ஊருக்குப் பழிப்பு.

ஒரு ஊரில் இரண்டு பைத்தியக்காரர்களா?

ஒரு ஊருக்கு ஒரு வழியா?

ஒரு ஊருக்கு வழி கேட்க ஒன்பது ஊருக்கு வழி காட்டுகிறான். 5910


ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரில் போட்டு ஒன்பது ஆள் கட்டி இழுத்தாற் போல.

(எட்டு ஆள்.)

ஒரு கண்ணிலே புகுந்து மறு கண்ணிலே புறப்படுகிறான்.

(வருகிறவன்.)

ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு.

(ஏன்?)

ஒரு கண் முடி ஒரு கண் விழிக்கிறவன்.

(விழித்தல்.)

ஒரு கம்பத்தில் இரண்டு ஆனையைக் கட்டினாற் போல். 5915

(ஆட்களை.)


ஒரு கரண்டி எண்ணெய் கொண்டு பலகாரம் சுட்டுப் பந்தி விசாரித்து வந்த பெண்டுகள் வாரி முடித்துப் பெண்டுகளால் பிடிமானம் இல்லாமல் புறக்கடை வழியாய்ப் போய் விட்டது.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

ஒரு கல விதையடி உவட்டை மாற்றிட, ஆறு பல வேப்பம்