பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தமிழ்ப் பழமொழிகள்

 காட்டுக் காடையைப் பிடிக்க வீட்டுக் காடை வேணும்.

காட்டுக்காரன் சும்மா இருந்தாலும் பூட்டைப் பிடுங்கி சும்மா இருக்க மாட்டானாம்.

காட்டுக்கு எறித்த நிலாவும் கசட்டுக்குச் செய்த நன்றியும் வீண்,

(கசத்துக்கு.)

காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

(கானல்-கடற்கரை.)

காட்டுக்கு ஒரு தெய்வம்; வீட்டுக்கு ஒரு தெய்வமா? 7840


காட்டுக்குப் புலி ஆதரவு; புலிக்குக் காடு ஆதரவு.

காட்டுக்குப் பெய்த மழை, கானலுக்கு எறித்த நிலா.

காட்டேரி உடைமை இராத் தங்காது.

காட்டேரிக்கும் கணக்கனுக்கும் அடிக்கடி கொடுக்க வேணும்.

காட்டைக் காத்த நரியும் வீட்டைக் காத்த நாயும் வீண் போகா. 7845


காட்டைக் காத்தவனும் கடையைக் காத்தவனும் வீண் போவது இல்லை.

காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

காட்டை வைத்துக் கொண்டு அல்லவோ வேட்டை ஆட வேணும்?

காடிக் கஞ்சி ஆனாலும் மூடிக் குடி.

காடிக்குப்போய்த் தயிர் கொண்டு வந்தது போல. 7850


காடு அழிந்தால் நாடு அழியும். காடு அறியாதவன் கல்லாங் காட்டை உழுவான்.

(உழ வேண்டும்.)

காடு ஆறு மாசம்; நாடு ஆறு மாசம்.

காடு எரியும் பொழுது வீடு எரியக் கூடாது.

காடுகள் இருப்பின் நாடுகள் செழிக்கும். 7855


காடு காத்த நாயும் வீடு காத்த நாயும் வீண் போகுமா?

காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

காடு கெட ஆட்டை விடு.

காடு கெட வீடு கெடு.