100
தமிழ்ப் பழமொழிகள்
காணலாம், கேட்கக் கூடாது; கேட்கலாம். காணக்கூடாது; காணவும் காணலாம், கேட்கவும் கேட்கலாம்.
- (சகுன வகை. )
காண வேண்டி இருப்பாரைக் கிள்ள வேண்டி இருக்குமாம்.
காணாத கனவு கண்டால் ஒருவரோடும் சொல்லாதே.
காணாததை எல்லாம் காணலாம் கந்த புராணத்திலே.
- (பொருளெல்லாம், புளுகெல்லாம்.)
காணாத நாயைக் கண்ட மனிதன் போல. 7885
காணாத மூளி கஞ்சியைக் கண்டால் ஓயாமல் கூட்டரைப்பாளாம்.
காணாதவன் கஞ்சியைக் கண்டானாம்; ஓயாமே ஓயாமே ஊதிக் குடித்தானாம்.
காணாதவன் கண்டால் கண்டதெல்லாம் கைலாசம்.
காணாது கண்ட கம்பங் கூழைச் சிந்தாது குடியடா சில்லி மூக்கா,
- (குடியடி சில்லி மூக்கி.)
காணாது கண்டாற் போல. 7890
- (கண்டார்.)
காணாப் பால் கலப் பால்,
- (காணாப் பால் மாடு அடக்கும் பால்,)
காணாப் பீ கழுவாமல் போம்.
காணாமல் கண்டேனே கம்பங்கதிரை.
காணாமல் கோணாமல் கண்டு கொடு.
- (சந்தியா வந்தன அர்க்கியம்.)
காணாமல் போன முயல் பெரிய முயல். 7895
காணார் என மாணாவினை செய்யார்.
- (பழமொழி நானூறு.)
காணி அறுத்தாலும் கோணி கொள்ளவில்லை.
காணி ஆசை கோடி கேடு, காணி ஏறக் கோடி அழியும்.
காணிக்கு ஒத்தது கோடிக்கு. 7900
- (ஏற்றது.)