பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தமிழ்ப் பழமொழிகள்


காணலாம், கேட்கக் கூடாது; கேட்கலாம். காணக்கூடாது; காணவும் காணலாம், கேட்கவும் கேட்கலாம்.

(சகுன வகை. )

காண வேண்டி இருப்பாரைக் கிள்ள வேண்டி இருக்குமாம்.

காணாத கனவு கண்டால் ஒருவரோடும் சொல்லாதே.

காணாததை எல்லாம் காணலாம் கந்த புராணத்திலே.

(பொருளெல்லாம், புளுகெல்லாம்.)

காணாத நாயைக் கண்ட மனிதன் போல. 7885


காணாத மூளி கஞ்சியைக் கண்டால் ஓயாமல் கூட்டரைப்பாளாம்.

காணாதவன் கஞ்சியைக் கண்டானாம்; ஓயாமே ஓயாமே ஊதிக் குடித்தானாம்.

காணாதவன் கண்டால் கண்டதெல்லாம் கைலாசம்.

காணாது கண்ட கம்பங் கூழைச் சிந்தாது குடியடா சில்லி மூக்கா,

(குடியடி சில்லி மூக்கி.)

காணாது கண்டாற் போல. 7890

(கண்டார்.)


காணாப் பால் கலப் பால்,

(காணாப் பால் மாடு அடக்கும் பால்,)

காணாப் பீ கழுவாமல் போம்.

காணாமல் கண்டேனே கம்பங்கதிரை.

காணாமல் கோணாமல் கண்டு கொடு.

(சந்தியா வந்தன அர்க்கியம்.)

காணாமல் போன முயல் பெரிய முயல். 7895


காணார் என மாணாவினை செய்யார்.

(பழமொழி நானூறு.)

காணி அறுத்தாலும் கோணி கொள்ளவில்லை.

காணி ஆசை கோடி கேடு, காணி ஏறக் கோடி அழியும்.

காணிக்கு ஒத்தது கோடிக்கு. 7900

(ஏற்றது.)